- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:
- வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)
- முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …
- கடந்து செல்லும் கணங்கள்…
- படைப்பாளி
- இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்
- அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்
- சமுதாய மேம்பாடும் பக்தி உணர்வும்
- அதிகாரப்பூர்வமாக!
- நீர்க்குமிழி
- நிராகரிப்பு
- மழை வரப்போகிறது இப்போது !
- சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
- மூன்றாவது கவிதைத் தொகுதி –
- அம்ஷன் குமார் நடத்தும் குறும்பட ஆவணப்படங்களுக்கான இருதின பயிற்சிப்பட்டறை
- திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்
- ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்
- பைத்தியக்காரர்களின் உலகம்
- பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
- பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1
- மொழிவது சுகம்:- தலைவர்களும் மனிதர்களும்
- நினைவுகளின் சுவட்டில் – (54)
- இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி
- சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.
- பெயெரெச்சம்..
- ஏதோவொரு நாள்
- பரிமளவல்லி பற்றி
- அவன் இவள்…
- சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி
- இனிக்கும் கழக இலக்கியம்
- அவனும், அவளும்
- முள்பாதை 49
தேனம்மை லஷ்மணன்
***********************
லாரி முகப்புகளில்.,
விளம்பரப் பலகைகளில்.,
திரையரங்கு நிறுத்தங்களில்.,
ஊர் காட்டிகளில்.,
ஒளிந்து தெரியும் உன் பெயர்..
ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியோ.,
நகை அடகுக்கடையோ.,
உணவுக் கூடமோ.,
அணியாடை அகமோ.,
தேய்ந்தும் கரைந்தும்
மறைந்தும் பளிச்சிட்டும்..
சுருட்டைக் கேசமாய்
கருத்த எழுத்துக்களில் உன் பெயர்..
உன் பெயர் சொல்லிக் கூப்பிட்டு
யாரோ யாரையோ அழைக்கும்போதும்
தோளணைத்துச் செல்லும்போதும்.,
குழந்தைகளைக் கொஞ்சும்போதும்.,
காதுகளில் வழிகிறது தேன்..
பத்ரிக்கையிலோ.,
புகைப்படத்திலோ.,
தொலைக்காட்சியிலோ.,
உன் பெயர் கொண்டவரைப் பார்த்தால்
ஒரு சந்தோஷப்பூ மலர்கிறது
கண்ணிலும்., மனசிலும்…,இத்ழிலும்.,
எதிர்பாராது உனையே கண்டதாய்..
உன் பெயர் பொறித்த இடங்கள்
சரித்திரக் கல்வெட்டுக்களாய்
மனதில் படிந்து.,
தடங்களற்ற கணனித்திரையிலும் கூட
நிரவிக் கிடக்கும் உன்னை.
நெருடிப்பார்க்கிறேன்
நீ கனவா நனவா என்று.