- அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்
- பேன்
- பரமேசுவரி
- தெரு நாய்
- மண்ணெண்ணெய்
- தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? இப்பேரணையைக் கண்ணீரால் கரைத்தோம்! கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு
- சரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)
- மலேசிய மகுடம்
- வாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்
- எம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு
- நபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்
- வஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு
- ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?
- ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்
- விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்
- மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி
- பெரியபுராணம் – 22
- கீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- குருஷேத்ரம்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50
- அக்கரையில் ஒரு கிராமம்
- பேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி
- ஒரு சிறுவனின் கனவு
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- கவிக்கட்டு 40-உள்ளத்தை மட்டும் !
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 7-அது..அவன்..அவள்.!
- இறைத்தூதர்
- என்ன சொல்ல…. ?
- பிரியாதே தோழி
- நாற்காலி
- பூமியின் கவிதை
- மாந்தரென்றால்….
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- கவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1
- இசை அரசி எம்.எஸ்.
புதியமாதவி, மும்பை.

கனவுகளின் எச்சமாய்
காற்றுமண்டலம்.
தூசிகளில்தான்
பயணிக்கிறது
சூரியனின் கால்கள்.
அந்தக்கால்களுக்காக
காத்திருக்கிறது
நிலவின் ஆகாயம்.
கல்லாகுமோ நிலவு ?
கண்விழிக்குமோ நிலவு ?
கறைபடிந்தக் கால்களுக்காக
கண்மூடித் தவமிருக்கும்
ஆகாயக்கங்கை.
**
பூமியின் கருப்பையில்
அலைமோதுகிறது
கடலலைகள்.
பிரசவவலியில் துடிக்கிறது
இமயத்திற்கு
தொட்டில்கட்டிய
மண்ணின் மடி.
நதிமுலைகள்
கசிந்து அருவியாய்
நனைக்கிறது.
எரிதழல் பிளந்து
முளைக்கிறது புதியவிதை.
விதையின் வேர்களில்
கருப்பை வெடிக்குமோ ?
கடல்நீரைக் குடிக்குமோ ?
காத்திருக்கிறது
தொப்புள்கொடியாய்
தொடர்ந்த உறவுகள்.
**
எத்தனை மலர்கள் ?
எத்தனை விதைகள் ?
எத்தனை கிளைகள் ?
எத்தனை இலைகள் ?
இத்தனையும் தாங்கும்
உன் வேர்கள்.
வேர்களின் தரிசனம்
மறைக்கப்பட்டதால்தான்
இலைகளின் தரிசனம்
கிளைகளுக்கு.
மலர்களின் தரிசனம்
விதைகளுக்கு.
மறைக்கப்பட்டதை மறந்து
சிரிக்கிறது
இலைகள்.
மறைக்கப்பட்டதை மறக்கலாம்
மறுக்கலாமோ ?
உதிர்ந்து போகிறது
விதைதாங்கிய மலர்கள்.
**
puthiyamaadhavi@hotmail.com