- தாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் ?
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரிய குடும்பம் எப்படி உண்டானது ? (கட்டுரை: 25)
- சுஜாதா
- ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..!
- தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்
- சிவமடம்
- Last Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு
- Lecture on “A Study on the status of traditional shadow puppetry and puppeteers of South India” by Dr.R.Bhanumathi
- இப்னுபஷீரின் சிரிப்பு
- இலக்கிய வட்டம், ஹாங்காங்
- சித்திரைதான் புத்தாண்டு
- காலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- தமிழ் விடுதலை ஆகட்டும்!
- விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
- ஏமாற்றுத் தமிழ்ப்பற்று!
- ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்
- தலைப்பில்லா கவிதை
- சம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்
- நர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7
- திறப்பதற்கு மறுக்கட்டுமே !…
- தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்
- கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா
- க ழ னி
- எட்டு கவிதைகள்
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2
- நான், நீ, அவன்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)
- “சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து
- சிலரின் கைகளில் விமர்சனம்
- வெளி – விதைத்ததும் விளைந்ததும்
- யாம் மெய்யாய் கண்டவற்றுள்
- கடைசி உணவு நாட்கள்
- கண்ணதாசன் காப்பியடித்தானா?
- உலகம் உலர்ந்து விட்டது
- மரணம்-வியாக்கியானம்-இறந்தவர்கள்
- ஈழத்தமிழரின் அனுதாபி சுஜாதா
- தேடலில்…!
- காற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு !
- ஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் !
- வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க!
- பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)
கே ஆர் மணி

நானும் நீயும்
புரண்டு தளர்ந்த
நிமடங்களில் நம்மிலிருந்து
குதித்து நமக்கு நடுவில்
அவன் படுத்துக்கொண்டான்.
நீயும் நானும் நினைத்துகொண்டோம்
விரட்ட வேண்டுமென
நினைத்துக்கொண்டேயிருந்ததில்
மறந்துபோயிற்று.
யாரை நினைத்தாய் நீ என்றும்
எவளை நினைத்தான் நான் என்றும்
விளையாட்டுபோல கேட்டுக்கொண்டாலும்
கேள்வியின் இறுதியில் இப்போதெல்லாம்
அவனின் நீளம் அதிகமாவதால்
நாமிருவரும் அச்சமுறுவதை
அப்பட்டமாகவே அறிகிறோம்.
கொஞ்சநாளில் அந்தக்கேள்வி
மறைந்தே போகும்.
அவனின் ஊமைச்சிரிப்பு சத்தம்.
எல்லாயிடங்களிலும்
உனக்கும் எனக்குமான இடைவெளிகளை
அவன் நிரப்பிக்கொண்டேயிருந்தான்.
நம்மோடு
சாப்பாட்டு மேஜைகளில்
தொலைக்காட்சி பெட்டிமுன்
காலை நடைபயிற்சியில்
அவன் நிரம்பிக்கொண்டேயிருந்தான்.
வார்த்தைகளை தொலைத்து,
வாதங்களை தவிர்த்து,
விவாதமோ, இணையவோ தேவையின்றி
நிரம்பிக்கொண்டேயிருந்தான்
சூன்யக் கனமாய்.
காலண்டர் தாள்களின்
எண்ணிக்கை குறைய குறைய
அவனின் அடர்த்தி அதிகமாகிறது.
எதற்காகவது சண்டையிடலாம்
புது உள்ளாடையால் ஊக்குவிக்கலாம்.
ஆறுதல் மொழிகளால் ஆயாசம் தவிர்க்கலாம்.
எனக்கு பிடித்த இலக்கியத்திலிருந்து
ஏதாவது கேட்கலாம்.
நல்ல உணவாய் வயிற்றிலிறங்கி
இதயத்தில் ஏறிவிடலாம்.
என்ன செய்து
நமக்கிடையே படுத்திருக்கும்
ஆதிஸேசனை விரட்டலாம் என
நீ யோசிக்கிறாய்.
நானும் கண்மூடி அதையே
யோசிக்கிறேன்.
யோசித்துகொண்டேயிருப்பதால்
மறந்தும், மரத்தும் போய்விடுகிறோம்.
அதற்குள்
அவன் பருத்து விடைத்துகொண்டேயிருக்கிறான்.
எப்போது வெடிப்பான் என்று
நாம் வேடிக்கைப்பார்த்துகொண்டேயிருக்கிறோம்
அவனையே, அவன் மொழியாலே..
நான் நான்
நீ நீ
அவன் மெளனம்.
mani@techopt.com