- ஞானியின் “கரடி”!! – An open letter to Mr.Gnani
- கண்ணகியின் சிலை பற்றிக் கருத்துகள் சில
- கண்ணகி-மரணதண்டனைக்கு எதிரான இளங்கோவடிகளின் குரல்
- கண்ணகி தமிழரின் தாய்
- கண்ணகி சிலை விவகாரமும், மரபு மறு பரிசீலனைகளும்
- Premier Show of the documentary film on Sir C.V.RAMAN – 14th June 2006
- இந்தியாவில் செய்யப்பட்ட இந்திய மது வகை – Indian Made Indian liquor
- வகாபிகளின் புதிய திருக்குர் ஆன்
- ஜனாப் வஹாபியின் குழப்பம்
- கடிதம் ( ஆங்கிலம் )
- தூய்மை படிந்து உதறி
- செக்கும் சிவலிங்கமும்..
- யார் காட்டுமிராண்டிகள்?
- வாத்தியார்
- குறுநாவல் : சேர்ந்து வாழலாம், வா! – 6
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 24
- கடிதம் ( ஆங்கிலம் ) : On Mani Manik’s Facts & Figures
- கவிதைகள்
- கீதாஞ்சலி (76) நேருக்கு நேராக நானா?
- அம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்
- வார்த்தைகளுடையவன்
- பெரியபுராணம் – 91 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 3. உணவு
- இஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை
- தமிழ்நாடே! தமிழை நடு!
- பிலாக் பிக்ஸன் : பின்நவீன கதை சொல்லல் முறை
- புதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை
- விளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை
- திண்ணை அட்டவணை – பிற்படுத்தப் பட்ட சாதியினர் விகிதாசாரம்
- Poster Design on HIV/AIDS Awareness
- தேடல்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-4)
- கற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்
- உடையும் புல்லாங்குழல்கள்
- இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி…
- கடித இலக்கியம் – 8
- செர்நோபில் அணுமின் உலை விபத்தால் உடனே நேரிட்ட விளைவுகள் -7
- வானவில் கொடி
- ஐ. சாந்தனின் இரு குறுங்கதைகள்
டீன்கபூர்

கண்டு மகிழாத அழகுக்குள்
மனத்தை உசுப்பியது தென்றல்.
படர்ந்த கொடி கருகிய போதுதான்
ஆணிவேரின் பலம் அறிந்தேன்.
லச்சணம் அற்ற உள்ளுணர்வுகள்
மேவி வரும் போதெல்லாம்
சுழலும் குப்பைக் காற்று
கண்களுக்குள் புதைகின்றன.
நேசம் குழுமி ஒரு வடிவத்தைப் படைக்க
நம்மை இழந்து நிற்க வேண்டியதாயிற்று.
பூமிக்குள் உருப்பெறும் பூகம்பங்களுக்கும்
நமக்குள் ஊறாகும் அதிர்வுகளுக்கும்
எங்கே அளவுகோல் என்று
விஞ்ஞானி முழிக்கிறான்.
ஒருவனும் சிரிப்;பதாகத் தெரியவில்லை.
ஒருவனும் அழுவதாகவும்; தெரியவில்லை.
மனசுகளுக்குள் மாபெரிய மலைகள்
புகைக்கின்றன.
ஒரு வெளி அசைவதும்
ஒரு மாயை தெரிவதும்
விழிகளைக் கசக்குகின்றபோது…..
ஒற்றையாய்ச் சுற்றும் பருந்துக்கு
பேட்டினுள் மறையும் குஞ்சு உணவாக.
எதுவும் ஆசை தீர்ப்பதில்லை.
எதிலும் பாசம் மொய்ப்;பதில்லை.
பிசைந்த விரல்களுக்குள் மூளை
பேசுகின்ற போது
நலம் மேலோங்கி இருக்கும்.
இமை உயிருடன் ஆயிரம் பேசும்.
உரோமக் கண்களுக்குள்ளும்
வறண்டிராத பெரு மூச்சு பாய்கிறது.
ஆயிரம் கனவுகளுக்குள்ளும்
ஒரு கனவு மெய்ப்பட
தவங்கிடந்தே காலம் கரைகிறது.
படைத்தவன், எவருக்கும் பாரங்கல்லை
தலையில் வைப்பதில்லை.
மண்டைத் சுவட்டில் அவன் மொழி
பேசிக் கொண்டிருப்பதே முடிவு.
ஆயினும்
தூய்மை மனிதனில் படிய வேண்டும்.
டீன்கபூர் – இலங்கை
deengaffoor7@yahoo.com