This entry is in the series 20100402_Issue

ராம்ப்ரசாத்


கானல் நீர் காரணிகளால்
உருவாகும் மேடு பள்ளங்களை
சமன்படுத்தவே கொட்டப்படுகின்றன
வார்த்தைகள்…
உடைத்தெறியப்படும் மனச்சுவர்கள்
மட்டுமே அறியும் வார்த்தைகளின்
கூர்மை…
மேடுப‌ள்ள‌ங்க‌ள் ச‌ம‌ன்ப‌ட்டாலும்
உடைந்த‌ சுவ‌ர்க‌ளை
பூச என்றுமே முடிவ‌தில்லை…
உடைந்த‌வைக‌ள்
உடைந்த‌வைக‌ளே…
உடைந்த‌ சுவ‌ர்க‌ள்
சித்திர‌ங்க‌ள் தாங்குவ‌து
சிக்க‌லான‌ ஒன்று…
கோடுக‌ளையும் வண்ண‌ங்க‌ளையும்
துணைக்க‌ழைத்தே
விரிச‌ல்க‌ளை ம‌றைக்க‌
முடிகிற‌து…
சுவ‌ர்க‌ள் ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டால்
விரிச‌ல்களும் தாங்கும்
சித்திர‌ங்க‌ளும் தாங்கும்…

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation