- முள்பாதை 25
- அவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா
- சு.மு.அகமது கவிதை
- காதல் வரம் பெற்றிடாத ஞானிகள்
- மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு
- உள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்
- மரணத்தின் வாசல்..
- சதையானவள் .
- தொட்டி மீன்
- கவன குறிப்பெடுத்தல்..!
- வீட்டோடு
- நினைவில் நின்றவள்
- சில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் !
- குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்
- ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)
- வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்
- முன் முடிவுகளற்று இருப்பது
- 9/11 – விடையறாக் கேள்விகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13
- இவர்களும் சுவர்களும்
- கருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக
- முல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -2
- 11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை
- வேத வனம் விருட்சம் 81
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு
சு.மு.அகமது
வேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல்
எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும்
பூடகப் பறவையின் பறத்தல்
காலக் களறியின் குளம்பொலிப்பட்டு
கன்றி கனன்று கங்கென உமிழும் எண்ணங்களை
செந்தீனியிட்டு பசியாற்ற விழைகையில்
மவுன தேசத்து சிறகொன்று
வருடிடும் மென்மையாய் உணர்வுகளை
வேண்டுதலற்ற பிரார்த்தனையின் விளைவாய்
அந்நியப்படும் மனக்கிலேசங்கள்
மாற்றாய் பிணிநீக்கும் அருமருந்தாய்…
எல்லாம் வாய்க்கும் பொழுதில்
கூடுவிட்டு பாய்ந்தோடும்
நினைவுக்கலவையில் வார்த்தெடுத்த ஓவியசிதிலங்கள்
உண்மை உணர்த்துவது உள்ளவற்றையே!
சு.மு.அகமது
———————–