- துணைநலம்
- நாகூர் ஹந்திரி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- குண்டுமணிமாலை
- உள் சாரல்
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- விழிப்பு
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- மழை வருது
- கழிவுகள்
- அதே கனவு
- நிஜங்களாக்கு….
- சமாதானமே!
- உணர்வு
- நிஜங்களாக்கு….
- எங்கள் தாயே
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- சத்தியின் கவிக்கட்டு 15
- கருவறை சொர்க்கம்
- சாவோடு வாழ்தல்
- காற்றுக்கிளி
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கணவனைக் கொல்லும் காரிகை
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- தீருமா சென்னையின் தாகம் ?
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911
- மெய்மையின் மயக்கம்-8
- பாரென்ஹீட் 9/11
- Capturing the Freidmans (2003)
- பாப்லோ நெருடா
- அரசியலும் ஆங்கில மொழியும்
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
பட்டுக்கோட்டை தமிழ்மதி

சாளர ஒரம் அமர்ந்தேன்.
சட்டத்துக்குள் ஓவியம்
இருகண்ணில் ஒருவானம்.
கிளைமறை சூரியன்.
இலைமறை காய்.
சலிக்கும் மாமரச்சல்லடை
தரைமீது
ஒளியும் நிழலும் உதிரக்
குலுங்கும் கிளைகளில்
கொத்துக்காய்கள்.
ஓவியமாய் இருந்தமரம்
ஒருகற்றில் சிலிர்க்க
காகிதமாய்ச் சருகு மட்டும்
கைமீறிப் பறக்க….
காற்றின் வருகையாய்
எங்கிருந்தோ கிளி
இறகடித்து வந்தது.
அதனிடம் மரம்
காம்பு விரல் நீட்டி
காயா…. பழமா…. கேட்டது.
கனிந்த மெளனத்தில்
கண்சிமிட்டும் கிள்ளை….
அவன்….யார்…. ?
அதட்டலில்….
அவனும் ஒடினான்
அழகுக் கிளியும் ஓடியது.
இல்லை
இன்னொருக் கிளியும் ஓடியது.
ஒத்தையில் ஒரு கிளிதான்
என்றிருந்தால்
ஓடும்போதுதான் தெரிகிறது
துணையிருந்த மறுகிளி.
அவன்
கல்லெடுத்துக் குறிவைத்தது
மங்காய்களுக்கா கிளிகளுக்கா ?
கல் ஒன்று
இலக்கு இரண்டா ?
எதற்கும்
கனியும்முன் காய்கவரும்
கள்ளம் ?
மரத்தடி போனேன்….
கிளி
இருந்தகிளை
உலுக்கிப் பறக்கையில்
விழுந்த கனிகள்
இரண்டு…. மூன்று….
இது
இன்னா செய்தார்க்கு
நன்னயம் செய்திடலா ?
எறியவந்தவனைக் கூப்பிட்டு
எறியாமலே பழங்களை
எடுத்துக் கொள்ளச் சொல்லுதலா ?
அவன்
மீண்டும் வருவானோ என்னவோ
கிளிகள் மீண்டும் வரும்தான்.
பயந்தோடுவதும்
பயம்மறந்து
பழக வருவதும் தான்
கிளிமனதா ?
இதற்குள் விழுந்தது
இன்னொரு கனி….
இங்கே
இப்பவும் இருக்குமோ
இன்னுமொரு கிளி….
எனக்குத் துணையாக!
—-
tamilmathi@tamilmathi.com