- மைனாரிட்டி !
- அவன் மீண்டான்
- சிங்கிநாதம்
- புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)
- எந்தையும் தாயும்
- என் இனமே….என் சனமே….!
- லிஃப்ட்
- பெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்
- எழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…
- ஒற்றித் தேய்ந்த விரல்
- இடம்
- ஒரு வசந்தத்தின் இறப்பு
- கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)
- நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]
- இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்
- ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்
- தத்துவார்த்தப் போர்கள்
- ஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்
மு.பழனியப்பன்

கைகளின் விரல்கள் தேய்ந்துவிட்டன
சுடுமணலில் அரிச்சுவடி வரைந்து
ஆங்கில எழுத்து
புளியங்கொட்டையில் நிறுத்தி
பால்கணக்கு எழுதி
விரல் விட்டு கணக்கு அறிந்து
எழுதி அழித்து எழுதி
கை நாட்டு பத்திரத்தில் வைத்து
நாதொட்டு பணம் எண்ணி
காசு அடுக்கி
சமையல் பாத்திரம் கழுவி
சமைத்த உணவு சுவை தேர்ந்து
கதவு தட்டி
பேருந்து கம்பி பிடித்து
அவசரத்தில் மிதிவண்டி பிடித்து
ஆயாசமாய் வண்டி ஓட்டி
மின்சாரப் பொறி இயக்கி
தொலைபேசி எண்கள் சுழற்றி
தட்டச்சுப் பொறி தட்டி
கணினி கைப்பிள்ளையைத் தொட்டு
கைகளின் விரல்கள் தேய்ந்துவிட்டன
மூளையின் வேகம் மெல்ல
விரல்களில் இறங்கிட
கைகளின் விரல்கள் தேய்ந்துவிட்டன
இன்னும் உள்ளன
கால்களில் விரல்கள்
muppalam2003@yahoo.co.in