- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.
- மே 2009 வார்த்தை இதழில்…
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- மனச்சுமை
- ஐந்து கவிதைகள்
- அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு
- சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி
- மரணம் பேரின்பம்
- மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009
- ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்
- புத்திஜீவிகள்
- தூரதேசத்திருந்து
- Call for Submissions for the 8th International Tamil Short Film Festival
- அதிரூபவதிக்கு…..
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்
- புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
- நேசக்குமார் அவர்களின் கட்டுரை
- பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்
- தலைவாசல்
- ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
- ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு
- வேத வனம் – விருட்சம் 34
- பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!
- மூர்த்தி எங்கே?
- நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை
- பூங்கா!
- நேசகுமாருக்கு என் பதில்
- வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை”
செல்வராஜ் ஜெகதீசன்

01
அழைத்துப் போய்வந்த
ஆசிரியரின் அத்தனை
கெடுபிடிகளுக்குப் பின்னும்
இன்னமும் நினைவில்
அந்த ஸ்கூல் பயணம்
இன்பச் சுற்றுலா என்றே.
02
இலவசமாய்
அரிசி டிவி
இயற்கை
உபாதைக்கு
கட்டண
கழிப்பிடங்கள்.
03
எதிர்வரும் பேருந்தில்
அடிபடும் அபாயம்.
இடப்புறம் நகர்ந்து
நடந்தேன்.
இளவயது மாதொருத்தியை
இடித்தபடி.
04
யாருமற்ற பூங்காவில்
ஊஞ்சல்
ஆடிக்கொண்டிருக்கிறான்
என் மகன்.
எவரையோ சேருமென்று
கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
நான்.
05
ஏதோவொன்றின்
தொடர்பாகவே
எதுவொன்றின்
நினைவும்.
