- “முகமிழக்கும் தருணம் இரவில்தான்”
- அணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது ? – 5
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9
- கொழுக்கட்டைச் சாமியார் கதை
- எங்கள் தேசப்பிதாவே
- பூகம்பம்
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- அவருடைய புகழுக்குப் பின்னால்
- கவிதை
- தமிழர் திருமகன் இராமன்
- சொற்களைத்திருடிய வண்ணத்திகள்…
- கவிதைகள்
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்
- அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்
- தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 30
- கால நதிக்கரையில்……(நாவல்)-26
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1
- “படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்
- தைலம்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2
- நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு
- எழுத்துப் பட்டறை
- தீபாவளி
- பொற்கொடியும் பார்ப்பாள்
- புக்குத்தீமா சமூகமன்றத்தின் பட்டிமன்றம்
- சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி
- ஹெண்டர்சனின் 20-வது பட்டிமன்றம்
- காதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு !
- நீரால் அமையும்
- Nfsc announces the Release of Video Documentary “Folklore of the Transgender Community in Tamil Nadu”.
- Marappachi Presents Kaalak Kanavu A Docu – Drama on Women in Public Space in Tamil Nadu
புதியமாதவி
எங்கள் தேசப்பிதாவைக்
காணவில்லை
கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு
மும்பை மாநகரை
முழுசா கொடுக்கிறொம்
எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
குண்டு மழையில்
குருதி வெள்ளத்தில்
மிதக்கிறது
எங்கள் சுதந்திர பூமி
தண்டவாளங்களில்
வெடித்துச் சிதறுகிறது
அஹிம்சைத் தேவியின்
அனாதைக் கனவுகள்
எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
கண்டு பிடித்து கொடுப்பவருக்கு
அரபிக்கடலை ஆஸ்தி ஆக்குவோம்
அமெரிக்க வல்லரசின்
அணு ஆயுத ஒப்பந்தங்களின்
சாட்சியாக
செங்கோட்டையில்
பறக்கிறது
எங்கள் மூவர்ணக்கொடி
மித்தி நதியின்
குடிசை வானத்தில்
செயற்கை கோள்கள்
சீறிப்பறக்கின்றன.
எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
கண்டு பிடித்து கொடுப்பவருக்கு
இமயப் பெருமலையை
எடுத்துக் கொடுத்திடுவோம்
திருவிழாவில்
குழந்தைகளைத் தொலைத்த
பெற்றவர்கள் உண்டு
நாங்களொ
தந்தையே
சுதந்திர தேவியின்
மணிவிழா மண்டபத்தில்
உன்னைத் தொலைத்துவிட்டோம்.
முன்னாபாயின்
முகவரியில் இருப்பதாய்
வெள்ளித்திரையில்
விளம்பரம் போட்டார்கள்
எட்டிப் பார்த்து
ஏமாந்து போனோம்
எங்கள் தேசப்பிதாவை
காணவில்லை..
கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு
இந்திய தேசத்தையே
இனாமாய்க் கொடுக்கிறோம்
எங்கள் தேசப்பிதாவைத்
தொலைத்துவிட்டோம்….
எங்கள் தேசப்பிதாவே…
வெள்ளையரின் ஆட்சியில்
விடிவெள்ளியாய் நீ
கொள்ளையரின் ஆட்சியில்
இருண்டு போனாய்.
கோட்சேயின் குண்டுகளில்
உயிர்த்து எழுந்த உன்னை
ராமபிரானின் அம்புகளால்
எங்கள் அரசியல்வாதிகள்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.
எங்கள் தேசப்பிதாவே
எங்கள் தலைவர்களை
மன்னித்துவிடு
அவர்களைத் தலைவர்களாக்கிய
எங்களையும் மன்னித்துவிடு.
எங்கள் தேசப்பிதாவே
நீ எங்களுடன் இருந்தால்
எதையும் சாதிக்கலாம்
அரசியல் வாதியை
அடியாள் ஆக்கலாம்
கூட்டணிக்குள்
கூட்டணி அமைக்கலாம்
எம்.பி , எம்.எல்.ஏக்களை
விலைக்கு வாங்கலாம்
எங்கள் சுதந்திர இந்தியாவில்
இந்து இசுலாம்
கிறித்தவன் சீக்கியன்
யாராக இருந்தாலும்
உன் புன்னகைக்காகவே
தவமிருக்கிறார்கள்
கறுப்பு வெள்ளையாய்
எப்போதும் புன்னகையுடன்
இந்திய தேசத்தின்
மதிப்பாய் வாழும்
எங்கள் தேசப்பிதாவே
உனக்கு எங்கள் அஞ்சலி.
puthiyamaadhavi@hotmail.com