- வினை
- பின்னல் பையன்:இரண்டாம் பாகம்
- டெபோனேரும் ப்ளேபாயும்
- இரண்டு கவிதைகள்
- கண்ணிலென்ன கார்காலம் ?
- அனகொண்டா
- மீண்டு(ம்) வருவேன்…
- தேடல்…
- எல்லாம் உன் பார்வை
- சுமைகளும் சுகங்கள் ஆகும்
- ஓ-ஹிப்
- உறைந்த இரத்தங்கள்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)
- கொடியது வறுமை..
- Lord Siva
- கட்டிய நெறி
- நினைத்துப் பார்க்கிறேன்
- அனைத்தும் ஒன்றே !
- அவிரோதம்
- இரண்டு ஹைக்கூக்கள்
- நாற்காலி
- அறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)
- விண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- ஜின்னாவும் இஸ்லாமும்
- வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1
- தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!!
- மலேசியாவின் இனப் பிரசினை
- Europe Movies Festival
ஜடாயு

கண்களின் காணல்களைக் காணும் கண்கள்
செவிகளின் கேட்டல்களைக் கேட்கும் செவிகள்
வாயின் வார்த்தைகளை வழங்கும் வாய்
நாசியின் நுகரல்களை நுகரும் நாசி
உடலின் உணரல்களை உணரும் உடல்
மனத்தின் நினைப்புக்களை நினைக்கும் மனம்
அறிவின் அறிதலை அறியும் அறிவு
சித்தத்தின் சிந்தனைகளை சிந்திக்கும் சித்தம்
உயிரின் உயிரை உயிர்விக்கும் உயிர்
அனைத்தும் ஒன்றே.
இமயச் சிகரத்தின் மணிமுடியில்
இரைந்தோடும் பேராற்றில்
சுழன்றடிக்கும் சூறைக் காற்றில்
நீலவானில்
ஆழ்கடலில்
பிரபஞ்ச வெளியில்
எங்கும் எங்கெங்கும்
இயற்கையின் இருப்பு ஒன்றே.
அனைத்தும் ஒன்றே.
சோகம் சுகம்
வீரம் கோழைத்தனம்
கண்ணியம் கயமை
வெறுப்பு விருப்பு
இருப்பு இறப்பு –
இருமைகளின் பின் இயங்கும்
மானுட இயல்பு
ஒன்றே.
அனத்தும் ஒன்றே.
அவனுக்குள் உள்ள அவன்
அவளுக்குள் உள்ள அவள்
அதற்குள் உள்ள அது
உனக்குள் உள்ள நீ
எனக்குள் உள்ள நான்
அனைத்தும் ஒன்றே.
***
(c) ஜடாயு (jataayu@hotmail.com)