- பத்து கவிதைகள்
- அன்பு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் !
- தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு
- கிணத்தினுள் இறங்கிய கிராமம்
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?(கட்டுரை: 27)
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)
- தாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு !
- மன மோகன சிங்கம்!
- பெயர் முக்கியம்!
- பெயரிலி!
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா
- பிறந்த நாள்
- நூல் வெளியீட்டு விழா
- குரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’
- பெயர்வு: புலமும்! புலனும்?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)
- நம் பையில் சில ஓட்டைகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9
- கடல் மீன்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3
- தீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி
- ‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!
- சார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”
- இலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு
- எத்தகைப் படைப்பு இந்த மனிதன் !
- அவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது !
- ஒப்பனை உறவுகள்
- ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா
- “Aalumai Valarchi” book release function
- ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்
- ’புத்தகங்கள்’
- காதலும் காமமும்
- கவிதைகள்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்
- கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம்
- உண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”
- Last Kilo byt – 13 : ஆடை..
- இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா
- FILCA Film festival schedule
- நாய்கள்
- நாசமத்துப் போ !
- ஹெண்டர்சன் பட்டி மன்றம்
மு.இளங்கோவன்
திண்ணையில் வெளியான ‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி,சென்ற திண்ணையில்(25.04.08) சடாயு கருத்துகளையும் அவரின் இணையப்பக்கத்தில் உள்ளஅவர்தம் கொள்கை முழக்கங்களையும் காணும்போது அவர் யார் என்பதையும், அவர் உள்ளத்துள் உறைந்துள்ள எண்ணங்கள் என்ன என்பதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
கட்டுரையைப்பற்றி எழுதியுள்ளதைவிட கிறித்தவ மதம்,திராவிட இயக்கம் பற்றித் தாக்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் அவருக்கு அவர்வழியில் விடைதருவது எனக்கு உகந்தது அல்ல.எனினும் கிறித்தவர்கள்,திராவிட இயக்கத்தவர்கள் செய்த தமிழ்ப்பணிகளையும்,தமிழின முன்னேற்றப் பணிகளையும் குறைத்து மதிப்பிட்டுள்ள சடாயுவுக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
மனுதருமம்,கடவுள்,சமயம்,சாதி இவற்றின் பெயரால் மக்களிடையே வேற்றுமைகளை விதைத்து அரசர்களுக்கு அறிவுரை கூறுவது என்ற போர்வையில் தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்தி ஏமாற்றி வாழ்ந்தவர்கள் ஆரியர்கள் என்பதையும்,தமிழ் இலக்கியங்களையும்,தமிழர்தம் கலைகளையும் சமற்கிருதமயமாக்கிக் கொண்டு தமிழ்மூலத்தை அழித்தவர்கள் என்பதையும் பரிதிமாற்கலைஞர் நூல்கள் வழி அறிக.
‘பார்ப்பார்க்கல்லது பணிபறியலையே’ என்பது ஒரு சங்க இலக்கியவரி.
ஆரியம் தமிழகத்தில் கலக்காதபொழுது தமிழ் தமிழாக இருந்தது.தமிழர் தமிழராக இருந்தனர்.பின்னர் வளவன், வழுதி,பாண்டியன், சேரன் என்ற பெயர்கள் மாறிஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்,விஜயாலயன் வந்தன. தமிழ் நீச பாஷையானது.மக்கள் அடிமையாக்கப்பட்டனர்.
பல்வேறு சூழ்ச்சிகளால் கல்வி,மருத்துவ,நாகரிக வசதியின்றி வாழ்ந்தவர்களையும் சாதியின்பெயரால் பிளவுப்படுத்தி ஒதுக்கிவைத்திருந்த மக்களையும் தங்களுக்குச் சமமாக மதித்து,கல்வி,மருத்துவ வசதிகள் தந்து தங்கள் கோயில்களில் வழிபாட்டிற்கு அழைத்துச்சென்ற கிறித்தவ,இசுலாமிய மதத்தாரின் பணிகளை ஒருதலைச் சார்பாகப் புறக்கணிப்பது நடுநிலையாளர்களுக்கு அழகல்ல.
உழைக்கும் மக்களைச் -சூத்திரர்களாக்கி வேசிமக்கள் எனவும் இவர்கள் கல்வி கற்கக் கூடாது எனவும் குறிப்பிட்டு இவர்கள் திருமணம் செய்யும் பெண்ணை தூய்மை(புனிதம்)பெறும்பொருட்டு முதலில் சோமனும்,அடுத்த நாள் கந்தருவனும்அதற்கடுத்த நாள் உத்திரனும்,நான்காம் நாள் அக்கினியும் நுகர்ச்சிசெய்தபிறகு இவளை மணம்செய்தவன் புணரவேண்டும் என்ற மந்தரங்கள் அருவருப்பு ஊட்டும் தந்திர வித்தைதானே.அம்மந்தரம் இன்றும் மணவீடுகளில் பார்ப்பனப் புரோகிதனால்
‘சோமஹ ப்ரதமோ
விவிதே கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸ்டே
பதிஸ தூயஸ்தே
மனுஷ்ய ஜாஹ’
ஒலிக்கப்படுவதை எடுத்துக்காட்டிய இயக்கம் திராவிட இயக்கம்தானே.சமூகநீதிக்கி வித்திட்டது திராவிட இயக்கம்தானே.
இவ்வாறு சமூகத்தில் உள்ள இழிவுகளைத் துடைத்தெறிய முயன்ற இயக்கத்தை நடுநிலை உணர்வுடையவர்கள் தவறாகக் குறிக்கமாட்டார்கள். அது வரலாறு.வரலாற்றை மாற்றுவது இயலாது.
திரித்த வரலாற்றை உரியவர்கள் எடுத்துக்காட்டுவது எந்தவகையில் தவறாகும்.
முகத்தை மறைத்துக்கொண்டு எழுதும் சடாயுவுக்கும் அவர் போன்றவர்களுக்கும், ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள், பெரியார் சிந்தனைகள்,அம்பேத்கர் நூல்கள்,பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை,The Civilized Demons – The Harappans in Rigveda -BY Malati J. Shendge(1977) நூல்களைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
மு.இளங்கோவன்
muelangovan@gmail.com