- அல்லி-மல்லி அலசல்- பாகம்3
- அம்மா எனக்கொரு சிநேகிதி.
- மூன்றாவது தோல்வி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- விடியும்! நாவல – (4)
- உலக நடை மாறும்
- பணமே உன் விலை என்ன ?
- சீதாயணம்!
- மூன்று கவிதைகள்
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- மறக்கமுடியவில்லை
- மூன்று கவிதைகள்
- முகவரி மறந்தேன்…
- மூன்று கவிதைகள்
- செந்தாமரையே
- சொல் தேடி பயணம்…
- நேற்றான நீ
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- வீட்டுக் குறிப்புகள் சில
- கடிதங்கள்
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- என் கவிதையும் நானும்
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- தமிழினி வெளியீடாக
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
வேதா

அழுகிறது இதயம்
ஆறுதல் சொல்லவில்லை நான்….
என் அழுகுரல் கேட்டு,
மரத்துக்கு மரம்
உச்சிக்கிளை கூடுகட்டி
குஞ்சுகளின் ஒப்பாரி……
சொட்டுச் சொட்டாய்
செத்துப்போகும், உனக்குள்
சிறைபட்ட என் பிம்பம்!!
சொல்லில் அடங்கா சோகம்
சொல்லியழும், என் நரம்பு நுனி….
விழிப்பார்வையின் வீச்சுக்குள்
விசிறி வீசிப் பார்க்கிறேன்,
காற்றின் ஒலிஅலையில்
குரலதிர்வைத் தேடுகிறேன்,
மறக்கமுடியவில்லை…..
என்
மனசெல்லாம் பூத்த மல்லிகையை!!
பழுத்த இலைகளுக்குப்
பச்சையம் இருக்காதே!
துன்பம் தூண்டியதோ ?
துளிரெல்லாம் உதிர்த்து,
துறவாய் நிற்கிறது….
வசந்த ருதுவெல்லாம்
விசித்து விசித்து, தன்
வாசனை தொலைக்கிறது!
உன்
பாராமுகமும், பேசாமொழியும் – என்னைப்
பைத்தியம் செய்கிறது!!
சின்ன விழியில் சிறுநதி,
என்னைச்
சேதாரம் செய்திடுமோ ?
அழுகிறது இதயம்
ஆறுதல் சொல்லவில்லை நான்….
piraati@hotmail.com