- இரண்டு கவிதைகள்
- சந்தோசமே உயிர் மூச்சு !(கவிதைக்குள் ஒரு கதை)
- நான் மட்டும்
- பெண்களை நம்பாதே
- மனசே! இதோ ஒரு பர்கோலாக்ஸ் ப்ளீஸ்!
- ‘வெள்ளிப் பனித்துளிபோல்… ‘
- காதல் கிழியுமோ ?
- கவிதைகள் இரண்டு
- கரைந்த இடைவெளிகள்
- இரண்டு கவிதைகள்
- நானே நானா
- பைத்தியக்காரி
- அறிவியல் மேதைகள் சத்தியேந்திர நாத் போஸ் (Sathyendra Nath Bose)
- அமெரிக்காவின் வேகப் பெருக்கி அணு உலையில் ஏற்பட்ட விபத்து (Meltdown Accident in Michigan Fast Breeder Reactor)
- பறவைப்பாதம் 4
- சாதி இரண்டொழிய….
- வெளிப்பாடு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது
- மனம்
- எமனுடன் சண்டையிட்ட பால்காரி!
- சிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..
- இரண்டொழிய
- I..I.T. – R.E.C. காதல்:
- தளுக்கு
- இது ஒரு விவகாரமான கதை
- இலக்குகள்
- வாரபலன் – 5 (மே இறுதி வாரம்) பாளம் பாளமாய்…
- கடிதங்கள்
- தியானிக்க மூன்று குரங்கு ‘கதைகள் ‘ ?
- குறிப்புகள் சில (ஜூன் 7, 2003)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 6
- பொன்னீலன் – சாகித்ய அகாடமி பரிசு
- இயற்கை விடுக்கும் செய்தி (பிரபஞ்சனின் ‘பிரும்மம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 64)
- சந்திப்பு
ராபின்

விரிந்து பரந்து, அகன்றதாய் இருந்தது
பார்வைகளின் எல்லைகளை மீறியதாய்
அதன் தொடக்கமும், முடிவும்
சாலையை நான் கடக்க வேண்டும்
சமிக்ஞை விளக்குகள் எதுவும் உதவிக்கில்லை
முன்னும் பின்னுமாய் இடைவெளிவிட்டு
அதை இட்டுநிரப்ப விரையும் வாகனங்கள்
எனது தேவையும் அந்த இடைவெளிதான்
அதனைக் காலம் எனலாம்
அல்லது தூரம் எனக் கொள்ளலாம்
எனது தேவை இடைவெளி மட்டுமே
அதன் பெயர்களல்ல
நான் சாலையைக் கடந்தாக வேண்டும்
புலன்களால் உள்வாங்கி
மனதால் கணக்கிட்டுக் காத்திருந்தேன்
நான் கடக்க வேண்டிய இடைவெளிக்காக
ஒத்துவராத இடைவெளிகள் சில வந்துபோயின
எனக்குத் தெரியும் அவை என்னை
மறுகரை சேர்க்காமல் அடித்துச்சென்று விடுமென்று
மவுனமாய்க் காத்திருந்தேன்
காலத்தின் சிலதுளிகள் கரைந்தபின்
கணக்குகள் மனதில் கூடிவந்தன
முன்னமே அதனைக் கண்டுகொண்டேன்
அருகில் வந்து மெல்லக் கரம்பற்றி
எனை பத்திரமாய்க் கரை மீட்டது
நன்றியாய் நான் பார்ததேன்
வெற்றிடத்தின் வெறுமையாய்
முற்றாய் என்னில் கரைந்து போனது
அந்த இடைவெளி
***
amvrobin@yahoo.com