- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 1
- வியப்புகளும் உவமைகளும் சிரிப்புகளும் : Six Suspects a Novel By Vikas Swarup (Author of Q&A a.k.a Slumdog Millionaire)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! வால்மீன்களும் முரண்கோள்களும் (Asteroids) ஓரினமா அல்லது வேறினமா ?(கட்டுரை 52)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியுடன் வாழ்வு >> (வசந்த காலம்) கவிதை -2 (பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -24 << காதலிக்குக் கேள்வி >>
- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 2
- நகரத்தில் வாழும் கிழவர்கள்
- “வேலியை உடைக்கும் மரணம்”
- இன்னொரு கரை…
- பறக்கத்தான் சிறகுகள்
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஐந்தாவது குறும்பட வட்டம்
- சாம்பல்நிறப் பூனை
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (1)
- வேத வனம் விருட்சம் 24
- சங்கச் சுரங்கம் – 3 : குப்பைக் கோழி
- நூல் நயம்: தெரிந்த – கவனிக்கத் தவறிய முகங்கள்
- காதலின் பரிமாணங்கள்
- இருக்கை
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (2)
- அடவி காலாண்டிதழ்
- தமிழ்நூல்.காம் வழங்கும் வாழ்வியற் களஞ்சியம் மற்றும் ஈழத்து நூல்கள்
- முடிவு உங்கள் கையில்
- கருணையினால் அல்ல!
- நினைவுகளின் தடத்தில் – (26)
- சிங்கப்பூரில் எழுத்தாளர் சை.பீர்முகம்மதின் நூல் அறிமுக விழா
- நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை
- மோந்தோ -5 (1)
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- மோந்தோ -5(2)
எஸ்ஸார்சி

வாழ் முனிகள்
தளைகள் தாண்டி
பெருமகிழ்ச்சிக்கு வசமானோர்
ஆசை
ஆவல்
ஆணவம்
விலகிட
எதனின்றும் தாமே
தள்ளி வாழ்வார்
இழப்புக்கே இடமில்லை
ஒழுக்கமும்
உயர் செயலும்
காலத்தால்தே கனிபவை
வருந்திட வாய்க்காது
ஒம்புக இடையறா நற்செயல். – விசாரபிந்து உபநிசத்-13-14.
கால்களொடு கைகள்
கண்களொடு செவிகள்
பேச்சும் மூச்சும்
எல்லாப்புலனும் வலிமை பெறுக
பிரம்மத்தின் சாதனங்கள்
அவையிங்கு அனைத்துமே
பிரம்மத்தை துறப்பதும்
பிரம்மம் என்னை ஒறுப்பதும்
இல்லை ஆகுக
பிரம்மத்தை யான் மறுத்தல்
பிரம்மம் எனை அறுத்தல்
இல்லை ஆகுக
உபநிடதம் பேசும் நல்லன
என்னுள் எழுந்து
எனதான்மா ஆனந்தமெய்துக.
எழுக அவை என்னுள்
பொலிக அமைதி, அமைதி, அமைதியெங்குமே- ஜ்யோதிர்பிந்து உபநிசத் சாந்தி மந்திரம்.
மாசிலா சுயஞ்சோதி
பிரம்மம் என்பது
மாறிலாதது
காலம் வென்றது
அளவிற்கெட்டா
அகாரணம் அது.
நாம ரூபம் கடந்து
உயர்வும் தாழ்வுமுதறிய
என்றுமுளது.
மனம் வாக்கு
தொட்டுவிடா
எங்குமுள
ஞானவெளி.
அனைத்துள்ளும் ஒளிந்து
அனைத்துமே ஆகிய
ஆன்மப்ப்பொருள்
எதனுள்ளும் எஞ்சிய
எல்லாவற்றின் ஆன்மா
ஒப்பிலி அது
ஏழுகோடி மாமந்திரங்களில்
யானே பிரம்மமாகிறேன்
உச்சத்தின் உச்சம்
ஒயாது ஒதுக
ஒயாது ஆய்க
அய்யமே இல்லை
அணுகளவும்
சித்திக்கும் அப்போதே விடுதலை.. ஜ்யோதிபிந்து உபநிசத் 1-3.
essarci@yahoo.com