- Salute el Presidente
- பெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- யானை வரும் முன்னே
- நீர்வலை (7)
- காதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் !
- என் அறை
- இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)
- ‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு
- மடியில் நெருப்பு – 21
- கொழும்பு குதிரை
- “மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”
- வாய் மொழி வலி
- வரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்
- தப்புக் கணக்கு
- எழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்
- உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்
- எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு
- பின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்
- கூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி
- சிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006
- பாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு
- கடித இலக்கியம் – 41
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9
- NFSC Screening – ” Chennai:The Split City” by Shri Venkatesh Chakravarthy
சாமிசுரேஸ், சுவிஸ்
இலையுதிர் காலத்தின் உதிர்ந்து
வெளிறிப்புதைந்த சருகுகளாய்
மெய்யிலா முகத்திடை வாழ்வு
புரியாத முடிவுகளாய்
வரைவிலக்கணம் புரிந்து
வளிவெளியில் நிரம்பும்.
நீண்ட காற்றற்றவயலில்
புதையுண்டுபோன காரண காரியங்களின் மேல்
கையூன்றி நடக்கும் மனசு
திரும்பி வர மொழியின்றி விஷ அழுத்தத்தினால்
தேகத்தினு}டே தீப்பெருக்கு.
மரணத்திற்கென்ன குறை
அது தன் வழியே
சந்திக்கும் கிளைகளைச் சாய்த்தபடி
எடுப்பார் கைப் பிள்ளையாக நடந்து போகிறது.
நான் எல்லாக் காயங்களாலும்
புன்னகை சுமந்த புழுவாய் சபிக்கப்பட்டவன்.
மறுபடி மறுபடி தேய்ந்து
மரண வாக்கு மூலம்வரை மறுபிறவியெடுத்து
திமிரடங்காது துடிக்கும்
என் கண்களினு}டே உற்றுப்பார்
பல புழுதி படிந்த வரலாறுகள் தெரியும்
முகத்தில் வழியும் நாற்றங்கள் தெரியும்.
மெல்லக் கரைந்து இருளில் மறைகிறது மலை
என்னையும் தனதாக்க
திரை சுற்றி இறுக்கும் இருளோடு
நானும் என்னுள் புதைந்து போகிறேன்.
14.01.2007
sasa59@bluewin.ch