- விரதம்
- குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்
- வளர்சிதை மாற்றம்
- அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)
- உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்
- தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்
- வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை
- வாழ்வும் கலையும்
- மன அஜீரணத்துக்கு மருந்து.
- மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்
- அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்
- இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)
- சொல்லுவதெல்லாம்
- சொல்லியிருந்தால்…
- தீவுகள்
- சபா- தீபாவளி ஸ்பெஷல்
- கணவன்
- தன்னாட்சி.. ?
- புதையல்
- உதய கீதம்
- யாருக்கும் நான் எதுவுமில்லை
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)
- அழைப்பிதழ்
- என் கதை
- முதல் சினேகிதி
- தேடல்
- அன்பைத் தேடி…
- வாழ்வும் கலையும்
சுந்தர் பசுபதி

கிட்டிப்புல் செய்து தரவும்
பள்ளியில் விட்டு வரவும்
கிரிக்கெட்டு மட்டைக்கு
வண்ணம் பூசவும்
தோளில் தூக்கி சாமி ஆடவும்
ஆட்டுப்பால் கறந்து பார்க்கவும்
காட்டாமணக்கில் குமிழி ஊதவும்
பால்யத்தில் பாதி நேரம்
என் தாத்தாவின் வயதை ஒத்த
வீட்டாள் முனுசாமி கூடத்தான்
சாப்பிடும் நேரம் மட்டும்
அவன் கொல்லை நடையிலும்
நான் கூடத்திலும்…
அவன் நீர் குடித்த குவளை கூட
நீர் தெளித்தே வீட்டுள் வரும்
வளர்ந்து , கிளைத்து
முதிர்ந்து வெளிப்படர்ந்து
திரைகடலோடி
ஐரோப்பிய தேசத்தினுள்
வெள்ளையை தவிர
மற்றதெல்லாம் கறுப்பெனவே அறிந்த
அயலகத்து மக்களுள்
இத்தனை கலந்தும்கூட
கண்ணுக்குத் தெரியாதொரு
சுவரை கடந்து விட்டு
தூக்கி வெளி வீசப்பட்ட
அந்த ஓர் நாளில்
சட்டென
கனவு கலைந்தது…
sundar23@yahoo.com