- ஓராண்டு கடந்து ஸ்ரீலங்காவில் சுனாமி மீட்சி வசதிகள் -2
- பொங்கல் வாழ்த்துக்கள்
- வ.ந.கிரிதரன் கவிதைகள்!
- விடியலை நேரம் உணர்த்தினாலும் ….
- திறந்திடு சீஸேம்! / கவிதாவதாரம் / எஸ். ஷங்கரநாராயணன்
- பிரதாபசந்திர விலாசம் -2
- கற்பனையும் சித்தரிப்பும் : எம். யுவனின் ‘கைமறதியாய் வைத்த நாள் ‘
- நம்பி வந்த வழியில் சேக்கிழார்
- பிரெஞ்சு படைப்புலகில் ‘சுயகதைகள் ‘(Autofiction)
- சகுனம்
- ஒரு கிராமத்து இளைஞனும் புலமைப் பரிசிலும்
- வளர்ச்சி
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சி.என்.ஜி
- முரண்பாடுகளின் அறுவடை
- கதை
- பாக்கி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4
- கீதாஞ்சலி (57) வலியூட்டும் இன்னிசை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- வார்த்தை
- பெரியபுராணம் – 73 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நான் கண்ட சிஷெல்ஸ் – 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம்.
வ.ந.கிரிதரன்

மீறிப் பார்!
உனது பரிமாணங்கள்தானெத்தனை சிறியவை.
அதற்குள் வளைய வந்து கொண்டா
இத்தனை ஆட்டமும், பாட்டமும் ?
முடிந்தால், மீறிட முடிந்தால்
முயன்று பார்!
மீறுதலென்பது அவ்வளவு தப்பான
காரியமல்லவென்பதை மட்டுமல்ல
மீறுதலென்பது வளர்ச்சியினொரு
படிதானென்பதை மட்டுமல்ல
ஏன்
மீறுதலென்பதவ்வளவு
இலகுவானதல்லவென்பதையும் கூட
மேலும் நீ புரிந்து கொள்ளலாம்.
அதற்காகவாவது
மீறிப் பார்!
விட்டு விடுதலையாக….
விட்டு விடுதலையாகி நிற்குமிந்தச்
சிட்டுக் குருவியின் வாழ்வு கண்டு
பொறாமைப்படுகின்றாய்!
அதுவாகவேயாகிக் கட்டுக்களை மீறி
எட்டுத் திசைகளும்
பறத்தல் பற்றிய கனவுகளில்
ஆழ்ந்து விடுகின்றாய்! ஆயின்
பொழுதும், கணமும்,
துரத்தும் பெரும் பட்சிகள் தவிர்த்துப்
போராடுதலை, தப்பிப் பிழைத்தலையே
வாழ்வெனக் கொண்டவதனிருப்புப்பற்றி
எப்பொழுதுதாவது நீ
எண்ணியதுண்டா ?
விட்டு விடுதலையாகச் சிறகடிக்குமிந்த
சிட்டுக் குருவியெனச் சிறகடிக்க
நீ சிந்தித்ததுண்டா ?
ngiri2704@rogers.com