- ஓராண்டு கடந்து ஸ்ரீலங்காவில் சுனாமி மீட்சி வசதிகள் -2
- பொங்கல் வாழ்த்துக்கள்
- வ.ந.கிரிதரன் கவிதைகள்!
- விடியலை நேரம் உணர்த்தினாலும் ….
- திறந்திடு சீஸேம்! / கவிதாவதாரம் / எஸ். ஷங்கரநாராயணன்
- பிரதாபசந்திர விலாசம் -2
- கற்பனையும் சித்தரிப்பும் : எம். யுவனின் ‘கைமறதியாய் வைத்த நாள் ‘
- நம்பி வந்த வழியில் சேக்கிழார்
- பிரெஞ்சு படைப்புலகில் ‘சுயகதைகள் ‘(Autofiction)
- சகுனம்
- ஒரு கிராமத்து இளைஞனும் புலமைப் பரிசிலும்
- வளர்ச்சி
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சி.என்.ஜி
- முரண்பாடுகளின் அறுவடை
- கதை
- பாக்கி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4
- கீதாஞ்சலி (57) வலியூட்டும் இன்னிசை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- வார்த்தை
- பெரியபுராணம் – 73 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நான் கண்ட சிஷெல்ஸ் – 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம்.
மட்டுவில் ஞானக்குமாரன்

அந்த நேர்முகத்
தேர்விற்க்கான முடிவை
முன்னரே தெரியுமெனக்கு ஸ
ஆனாலும்
வரிசையிலே நிற்க்கின்றேன்
ஒரு நப்பாசையிலே
வெள்ளைக்காரனின் எச்சங்களை
உடலிலே
தரித்ததவர்களே
கேள்விக்கணைகளை வீசினார்கள்
அவர்களில்
ஒருவனோ
என் சான்றிதள்களை
சரிபார்க்கிறான்
வாயிலே
வருவதை எல்லாம்
கேள்விகளாக்கினான் இன்னொருவன் ..
இலக்கியம் தெரியுமா
ஆங்கிலத்திலே
அளந்தான் ஒருவன் ஸ ?
தமிழ்
இலக்கியம் தெரியுமென்றேன்
இழக்காரமாக சிரித்தான்
என்
அதி மதிப்பெண்களுக்கு
இங்கே
மதிப்பிருக்கவில்லை ஸ
அமைச்சர்களின் நெருக்கத்திற்கும்
மேசைக்கு அடியிலே கொடுத்தவருக்குமே
தேர்விலே
தெரிவு என்ற பின்னே
காயப்பட்ட
மனது வடித்த கண்ணீரிலே
உருசிய புலமைப் பரிசில்
கரைந்தது
கம்யூனிச நாடு போவதற்க்குக் கூட
சிபாரிசுகள்
தேவையாகிய பின்னாலே
என்ன செய்வேன் ஏழை நான்
ஊர் திரும்புகின்றேன் வெறுங்கையோடு ஸ.
கவிதை மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)