- ஜனனம்
- ஒ லி ச் சி த் தி ர ம்
- விடியும்!நாவல் – (18)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தெட்டு
- இதயங்களின் தேவாலயம்
- எ(பெ)ருமை முயற்சிதரும்
- பரு
- என்னைத்தேடி
- முக வரிகள்
- மீட்சி
- வாலைச் சீண்டும் வானரம்
- நீ இருக்கிறாய்!
- கூட்டுக்கவிதை
- சந்திப்பு
- உன்னைப்போல் தான் நானும் ?!
- பாடி முடிக்கும் முன்னே…
- அன்பின் பஞ்சு
- மதி
- ஒரே ஒரு வழிதான்
- மானுடமாகட்டும் பெண்மை
- வைரமுத்துக்களின் வானம்-6
- கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்
- 2003 ஆண்டின் அறிவியல் நோபெல் பரிசுகள்
- கடிதங்கள்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1
- கவர்னர் Schwarzenegger
- வாரபலன் – அக்டோபர் 16,2003 – அமைதிக்குக் கத்தரி வாய்ப்பு
- பரி-மலம்
- ஹார்லிக்ஸ் (கல்லூரிக் காலம் – 3)
- குமரி உலா 7 — வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ]
- பகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘
- நகைச்சுவை நாயகன் மார்க் ட்வெய்ன் (1835 – 1910)
- பிரகடனங்களும், பிரமைகளும் – 1 (ஜெயகாந்தன் உரை குறித்து)
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais
- உயிர்மை அக்டோபர் இதழ்
இளந்திரையன்

முக வரிகள் நிறைந்து
முறுவலிக்க மறந்த
முகம்
முதிர்ச்சியாய்
கடும் பனியில்
கட்டிடக் காட்டினுள்
இயந்திரத்துடனான போராட்டத்தில்
இறுகிச் சிவந்து
வார இறுதியின்
வரவுக்கும்
மாசம் தவறாத
மருட்டும் செலவுக்குமான
இடைவிடாத போராட்டத்தில்
இன்னும் தொலைந்தது நித்திரை
மலர்கள் மழலைகள்
மரத்துப் போன இதயத்தின்
மானசீகக் கற்பனை
மயக்கமூட்டுவதாய்
கடிகார முள் பார்த்து
கால் ஓட
சாத்திய கதவின் பின்னால்
கவனமாய் ஒரு வரி – என்
முகத்திலேற
முறுவலிக்க மறந்த
முகம் முதிர்ச்சியாய்
முக வரிகள் நிறைந்து.
************************************************************
Ssathya06@aol.com