- ஒருசொல் உயிரில்….
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- நான்
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- சித்திரமே என்னை சிதைக்காதே
- ‘காலையும் மாலையும் ‘
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
மனுஷ்ய புத்திரன்

இன்று
எங்கேனும்
சாத்தியமாகலாம்
இதம் தரும் ஒரு மாலை
இன்று
யாருக்கேனும்
நிகழலாம்
எதிர்பார்ப்புகளற்ற ஒரு நேசம்
இன்று
யாரோ ஒருவரின்
ஆறாத்துயருள்ள காத்திருப்பு
முடிவுக்கு வரலாம்
கண்ணே
இன்று
நீ எடுத்துக்கொள்
இதோ இந்த
சீஸனினின் முதல் மாம்பழத்தை
இன்று ஏழாவது முறையாக
பேனாதிருடும்
பேதைக் குழந்தையே
திருடு இம்முறை
இந்த எழுத்தை
இந்த எழுத்து நகரும் புற்றுகளை
இந்தப் புற்றுகள் வளரும் நிலங்களை
இந்த நிலத்தில் தலைசாய்க்கமுடியாத ஒருவனை
இந்த ஒருவனை இன்னும் வாழ்த்தூண்டும் நம்பிக்கைகளை
இந்த நம்பிகைகளை விதைக்கும் பேனாவை
உன் அமைதி வேளை
ஒரு கண்ணாடிச் சமவெளி
யாரும் வருவதில்லை
யாதும் ஒலிப்பதில்லை
ஏதும் நிகழ்வதில்லை
உன்னைக்கூட அனுமதிக்காத
உன் அமைதிவேளை
ஒரு நாள்
தன்னைத் தானே கலைத்துக்கொண்டு
தேம்புகிறது
கொஞ்சம் அவகாசம் கொடு
வெய்யில் சற்றே தணியட்டும்
என் குழந்தைகள் வீடு திரும்பவேண்டும்
நான் என் காலணிகளை உரிய இடத்தில் வைத்துவிடுகிறேன்
இந்த அறை இவ்வளவு ஒழுங்கற்று இருக்கலாகாது
நான் ஒரு பழைய கடித்தை படிக்கவேண்டும்
ஒரு பழைய புகைப்படத்தை பாதுகாப்பாக ஒப்படைக்கவேண்டும்
என் நாயின் கண்களில் படரும் சந்தேகத்தைப்போக்கவேண்டும்
இறுதியாக எல்லாத் தடயங்களையும் அழித்துவிடவேண்டும்
கொஞ்சம் அவகாசம் கொடு.
lally@eth.net