- ஒருசொல் உயிரில்….
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- நான்
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- சித்திரமே என்னை சிதைக்காதே
- ‘காலையும் மாலையும் ‘
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
கோமதி நடராஜன்

விட்டுச் சென்ற நாளிலிருந்து
விடாமல் தேடுகின்றேன்.
தொட்டுச் சென்ற நாளிலிருந்து
தொடர்ந்து தேடுகின்றேன்.
கிணற்றில்,முத்தைத் தேடிய,
முட்டாள் போல்,
உன்னை-
பார்த்தால் மட்டுமே, பார்க்கும்
பாவிகளிடம் தேடினேன்.
சிரித்தால் மட்டுமே,சிரிக்கும்
சிறியோரிடம் தேடினேன்,
பேசினால் மட்டுமே, பேசும்
பேதையரிடம் தேடினேன்.
இங்கெல்லாம் கிடைக்க,
நீ என்ன கூழாங்கல்லா ?
சாக்கடையில் விழுந்த
சரளைக் கல்லா ?
ஆழ்கடல் முத்து நீ.
அள்ளிப் பருகும் அமுதம் நீ.
பொறி தட்டியது,ஒருநாள்.
புரிந்து கொண்டேன்,
நீ இருக்குமிடத்தை.
ஆதாயம் தேடாமல்
ஆதரவாய் வருடும் தென்றலில்
தவழ்ந்து வந்தாய் நீ!
சுயநலம் பார்க்காமல்
தாகம் தீர்க்கும் தண்ணீரில்
கலந்து நின்றாய் நீ!
எதிர்பார்ப்பு ஏதுமின்றி,
மணம் வீசும் மலரில்,
ஒன்றானாய் நீ!
அன்றிலிருந்து-
தென்றல், என்னைத்
தீண்டும் போதும்,
தண்ணீர், என் தாகம்
தணிக்கும் போதும்,
மலர்மணம்,என் நாசியை
தொடும் போதும்,
அன்னையே!நீ என் அருகில்
இருக்கின்றாய்,
உன்னையே எனக்குத்
தருகின்றாய் என்றுண்ர்ந்தேன்.
கண்டு கொண்டேன்,
நீ இருக்குமிடத்தை.
இனி-
நீ, இல்லாத இடத்தில்
தேட மாட்டேன்.
அங்கே-
இல்லையே என்று
வாடமாட்டேன்.
ngomathi@rediffmail.com