This entry is in the series 20090212_Issue

செல்வராஜ் ஜெகதீசன்



#

முதல் மகன்
பிறந்ததும்
மூக்கும் முழியும்
என்போல்
என்றார்கள்.
மூன்று வருடங்களில்
முகம் காட்டிக்கொடுத்தது
முழுவதும் மகன் ஜாடை
மனைவியின் ஜாடை
என்பது.
இப்போது
இரண்டாமவன் பிறந்ததும்
இவனும் என்போல்
என்றே பேச்சுக்கள்
எதிர்வந்து
விழுந்தவண்ணம்.

‘போல்’களின்றி
பார்ப்பதில்லை போல
எதையும் எவரும்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation