- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- பார்சலோனா -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- காதுள்ளோர் கேட்கட்டும்
- கடிவாளம்
- இரண்டு கவிதைகள்
- வனச்சிறுவனின் அந்தகன்
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- யெளவனம்
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- மேட்ரிக்ஸ் தமிழில்
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- சும்மாக் கிடந்த சங்கு
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- தந்தையும் தாயுமான அதிபர்.
- மறுபடியும் அண்ணா
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- குற்றமிழைத்தவனொருவன்
- கோகெய்ன்
- இசட் பிளஸ்
- முள்பாதை = வாசகர் கடிதம்
- எரியாத முலைகள்
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- உவமையும் பொருளும் – 1
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
செய்தி:ஆல்பர்ட்,அமெரிக்கா.

விக்டர் யூகோ அரங்கில் விமரிசையாக எதிர்வரும் செப்.19ம்தேதி நடைபெறவுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து விழா தலைமையை பாரீஸ் அலன் ஆனந்தன் அவர்களும் வரவேற்புரையை பொன்னம்பலம் நிகழ்த்த முன்னிலையை கிருபானந்தன் வகிக்க வாழ்த்துரையை மரியதாஸ், மதிவாணன்,ஓஷ் இராமலிங்கம்,அண்ணாமலைபாஸ்கர்,இலங்கைவேந்தன்,சிவாஜி,முத்துக்குமரன்,
பாரீஸ் பார்த்தசாரதி ஆகியோர் வழங்கவுள்ளனர்.
கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா
வாழ்த்துரைகளைத் தொடர்ந்து கவிமலரை பாரீஸ் கவிஞர் கணகபிலனார் வழங்குகிறார்
ஒரிய கவிஞர் முனைவர் மனோரமா பிஸ்வாஸ் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கவிதைத்
தொகுப்பு வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு ஸ்ட்ராஸ்பூர் நகரசபைத்
தலைவர் துணை மேயர் தனியல் பயோ தலைமை தாங்கிடவும் சாகித்திய அகாதமியின்
ஆலோசனைக் குழு உறுப்பினரும் கவிஞர்,கலை விமர்சகர்,மொழிபெயர்ப்
பாளருமான எழுத்தாளர் கவிஞர் இந்திரன் ஸ்ட்ராஸ்பூர் அருட்தந்தை மறைதிரு.ழெரார்,
திருமதி குரோ, திருமதி மனெ, திருவாளர்கள் தெபல் சவியெ, குப்தா ஆகியோர் பங்கேற்கவும் உள்ளனர்.
அறமும் தமிழும்…
தமிழ் கூறும் நல்லுலகம் தலைப்பிலான அரங்கிற்கு இலண்டன் பதிப்பாளர் பத்மனாப
அய்யர் தலைமை தாங்க, ஓவியக்கலைஞர் ஏ.வி.இளங்கோ அவர்கள் முன்னிலையில்
அறமும் தமிழும் என்ற தலைப்பில் தளிஞ்சான் முருகையன், காதலும் தமிழும் என்ற
தலைப்பில் புலவர் பொன்னரசு,கலையும் தமிழும் என்ற தலைப்பில் திருமதி லூசியா லெபோ, அவர்களும்,பொருளும் தமிழும் என்று புலவர் பாலகிருஷ்ணன், தருக்கமும்
தமிழும் என்ற தலைப்பில் நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரும் உரையாற்றுகின்றனர். இதனைத் தொடர்ந்து சாகித்திய அகாதமி உறுப்பினர் கவிஞர் இந்திரன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
பட்டிமன்றம்…
தொடர்ந்து பட்டிமன்றம் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் நடைபெறுகிறது. “கோவலன் தலை சிறந்தவனே” என்ற அணியின் சார்பில்
பாரீஸ் அடியார்க்கன்பன் கோவிந்தசாமி ஜெயராமன்,ஸ்ட்ராஸ்பூர் கியோம் துமோன்,பாரீஸ்அறிவழகன் ஆகியோரும்,
“கோவலன் நிலை இழிந்தவனே” என்ற அணியின் சார்பில்
பாரீஸ் கவிதாயினி பூங்குழலி பெருமாள் அவர்களும்,ஸ்ட்ராஸ்பூர் திருமதி இராஜ்ராஜேஸ்வரி பரிஸ்ஸோ அவர்களும், திருமதி உஷாதேவி நடராசன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
இறுதியாக தமிழ்ச் சோலை சிறார்களின் நடனமும் மெல்லிசை விருந்தும் நிகழவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நாகரத்தினம் கிருஷ்ணா(03 88 32 83 93),கிருபானந்தன்(03 88 81 65 61), பொன்னம்பலம் வடிவேலு
(03 88 79 08 36) ஆகியோரை அடைப்புக்குறிக்குள் உள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு
கொண்டு நிகழ்வின் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
செய்தி:ஆல்பர்ட்,அமெரிக்கா.