- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- துணை – பகுதி 3
- விழிப்பு
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- உறவு
- கவிக்கட்டு …. 47
- பேரழிவுச் சூலாயுதம்!
- பெரியபுராணம் – 29
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- மனைவியின் சிநேகிதர்
- குருவிகள்
- கணவனின் தோழியர்
- தொப்புள் கொடி!
- கவிதை
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- ஒவ்வாமை
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
குண்டலகேசி

சூர்யா அவர்கள் தன் அடுத்த படத்திற்கு ஏசி என்று இரண்டு தமிழ் எழுத்துகளை தலைப்பாக வைத்திருக்கிறார் என்று குமுதம் சொல்லுகிறது. அவருக்கு நம் வாழ்த்துக்கள். கமலஹாசனுக்கு இந்த தைரியம் வராது என்றே நினைக்கிறேன். கலைஞர்களின் படைப்புகளில் ஓவராக தலையிடும் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். அல்லது குறைந்த பட்சம் தன் மகன் டாக்டர் அன்புமணியையும், தமிழ் காவலரின் தங்க பேரனையும் முதலில் தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வண்ணம் வெள்ளை வேட்டி அணிந்து பாராளுமன்றம் போக சொல்ல வேண்டும். நம் பார்க்கும் போட்டோக்களில் இருவரும் சீமைத்துரை போல மேற்கத்திய பாணி 3 பீச் சூட் அணிந்து இருப்பதேன் ? பிரதம மந்திரி, ஜனாதிபதி, வெளிநாட்டு சோனியா என்று அனைத்து தலைவர்களும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிகின்றனர். தமிழ்நாட்டிலும் அனைத்து தலைவர்களும் வேட்டியில் தான் காட்சி தருகின்றனர், (சில கமாண்டோக்கள் தவிர.) இவர்கள் வீட்டிலிருப்பவர்களே இந்திய பண்பாட்டை மதிக்காதபோது மற்றவர்களை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும் ?
காண்டலீசா ரைஸ் அமெரிக்காவின் secretary of state ஆக பதவியேற்றுள்ளார். ஆனால் அமெரிக்க செனட்டர்கள் லேசில் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் எப்பொழுதோ பேசிய பேச்சுகளிலிருந்து நோண்டி நோண்டி கேள்வி கேட்டு துளைத்து எடுத்துவிட்டார்கள்- குறிப்பாக இராக் போருக்கு இவர்கள் வெவ்வேறு கட்டத்தில் சொல்லி வந்த காரணங்களை துருவி எடுத்தார்கள். ஒரு கட்டத்தில் என் நேர்மையை இழிவுபடுத்தாதீர்கள் என்று சூடாகவே சொன்னார். நம் இந்தியாவில் தான் இது போன்ற பிரச்சினைகள் இல்லை. எத்தனை முறை மாற்றி, மாற்றி பேசினாலும், ஜிம்னாஸ்ட் மாதிரி முன்பல்டி பின் பல்டி என்று மாற்றி மாற்றி அடித்தாலும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மக்களை கொண்ட நாடு. எங்கள் ஆட்சியில் நாடு ஒளிரவில்லை, இனி என்று ஒளிராமல் இருக்க எங்களுக்கே ஓட்டு போடுங்கள் என்று கேட்டவர்களுக்கு கூட நாற்பதையும் அள்ளில் கொடுத்த தயாள மனம் படைத்தவர்கள்.
சென்ற வருட ஆச்கருக்கு முன்னனியில் இருப்பது இரண்டு படங்கள்- The aviator மற்றும் Million Dollar Baby. சென்ற வருடம் பெரிதும் பேசப்பட்டு வசூல் கொட்டிய farenheit 911 படத்தை மைகேல் மூர் டாக்குமெந்தரி போட்டியிலிருந்து விலக்கிக்கொண்டார் என்று கேள்வி. இந்த படம் போட்டியில் இடம் பெற்றிருந்தால் விவாதங்கள் அனல் பறந்திருக்கும்.
அமெரிக்க ரேடியோவில் கேட்டது- எதிர்காலத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் மெகா பொருளாதாரங்களை கட்டுபடுத்தும் சக்தி ஆயிலுக்கே உண்டு.அந்த ஆயிலை கட்டுபடுத்தும் ரிமோட் கன்ற்றோல் எவர் கையில் உள்ளதோ அவனே எதிர்காலத்தில் வல்லரசாக இருக்க முடியும். கலிபோர்னியா அளவுள்ள இராக்கிற்கு சென்று இவ்வளவு நாளாகியும் அங்கு நிலைமையை கட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. வெறும் மூவாயிரம் பிரிட்டிஷ் அபீஸர்கள் எப்படி அவ்வளவு பெரிய இந்தியாவை ஆண்டார்கள் ? இந்த கேள்விக்கு திண்ணை வாசகர்களின் பதில் என்ன ?
(பி.கு. – இந்திய சிப்பாய் கலகத்தின்போது இந்தியாவில் இருந்த ‘இந்திய ‘ சிப்பாய் படை உலகெங்கிலும் உள்ள பிரிட்டிஷ் படைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரியதாக இருந்தது.)
http://www.sarkaritel.com/news_and_features/aug2004/03minhfw_ima.htm
kundalakesi_s@yahoo.com