This entry is in the series 20100425_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


அதிகாலை
விமானமொன்றில்
அடியேனை
வழியனுப்ப
வந்த நண்பன்

நீள் இரவை
கழிப்பதற்கென்று
திரைப்பட அரங்கொன்றில்
காத்திருந்த வேளையில்
கைபேசியில்

மனைவியிடம்
மறுபடி மறுபடி
கேட்டுக் கொண்டிருந்தான்
மகனின் தற்போதைய
ஜுரம் பற்றியும்
மருந்து கொடுத்தாயிற்றா
என்பதைப் பற்றியும்.

வழியனுப்பி
விடைபெற்றுப் போன
நண்பனின் அந்தப்
பின்னிரவு முகம்
இன்றுவரை
பின்னலிட்ட
சித்திரமாய் என்னுள்.

o

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>