- மோதிக்கொள்ளும் காய்கள்
- வரிசை…………..!
- ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..
- நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்
- கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய திறனாய்வு நூல் அறிமுகம்
- பின்னிரவு முகம்
- மீளெழும் கனவுகள்..
- அதிகாரத்தின் சரடுகளை இழுக்க துடித்த ஒரு அராஜகவாதியின் கதை
- மவுனம் பயணிக்கும் தூரம்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -14
- கடவுளின் ராஜினாமா கடிதம்
- சக்கர வியூகம்
- தமிழ் இலக்கியக் களம் பிரபஞ்சன் மற்றும் இசையமைப்பாளர் ஷாஜி ஆகியோரைக்கொண்டு கலந்துரையாடல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் கவிதை -27 பாகம் -2
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -7
- ஆணாதிக்கம்
- From the renowned & controversial Georgian filmmaker
- தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -11
- ஓளி விசிறும் சிறுபூ
- வேத வனம் விருட்சம் 82
- அமீரகத் தமிழ் மன்றத்தின் ’இனியொரு விதி செய்வோம்’ மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
- வாய் தந்தனவும் மறை தந்தனவும்
- முள்பாதை 26
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி எட்டு
- ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1)
- மராத்தா- முகலாயர் – 27 வருட போர் – போரியல் ஆராய்ச்சி
- மனங்கவர்ந்த டோரேமோனும் அற்புத மனிதர்களும்
- இணையத்தில் தமிழ்
- முருகாற்றுப்படையில் கடவுளர் வழிபாடும், நம்பிக்கையும்
கிண்ணியா எஸ். பாயிஸா அலி.

என்றைக்குமே விலக விரும்பாத
ஒற்றையடிப் பாதையில்தான் என்தொடர் பயணம்.
தூரத்து வளைவில் புதர் மண்டிய சந்தில்
தன் ஒளிரும் பிரகாசஇதழ்களை
தன்னில் வீழ்ந்த இலையொன்றுக்குள்
ஒளித்துக் கொண்டபடி சிறுபூ.
காலத்தை விஞ்சிய அதன் தனிமையை
என் வழிப்பயணத்தின் கணநேர அண்மையால்
தவிர்த்திட இயலாதுதான்.
எனினும் பயணம் தந்த மெல்லிய அதிர்வில்
அசைந்த பூவின் மேல் கவிழ்ந்திருந்த இலை
சட்டென விலகிற்று.
அது விசிறிய மழலைஒளி
எனை முழுதுமாய் நனைத்திற்று.
பின் வந்த ஒவ்வோர் பயணத்திலும்
மலர் ஒளிரும் புதரை அண்மிக்கும் போதெல்லாம்
உயிரோர் பிச்சைப் பாத்திரமாகிட
ஒளி மீதான உணர்வுகளின் யாசிப்பை
என்றைக்குமே தவி;ர்த்திட முடிந்ததில்லை என்னால்.