- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28
- தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி
- கனவில் வந்த கடவுள்
- தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968
- என்ன உரு நீ கொள்வாய்?
- அர்த்தமற்ற கேளிக்கைகள்…
- ஐந்திணை ஐம்பதும், எழுபதும்
- தொட்டிச் செடிகள்
- ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்
- வலி..!
- எது நிஜம், எது நிழல்?
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18
- ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்
- ப மதியழகன் கவிதைகள்
- வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை
- புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்
- ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)
- என் அன்பிற்குரிய!
- என்று தணியும்
- ஒரு கவிதானுபவம்
- பாலைவனத்து பட்டாம்பூச்சி:
- “மனிதம் வளர்ப்போம்!“
- எதிரும் நானும்…
- C-5 – லிப்ட்
- மீளல்
- கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
- கூழாங்கல்…
- இந்தியன் வேல்யூஸ்
- பார்வையும் களவுமாக
- பிடித்த தருணங்கள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- எழுத்தாளர் அம்பையின் மறுவினை
- Cloud Computing – Part 4
- தனித்துப் போன மழை நாள்
- இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)
- ஐந்திணை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)
- நினைவுகளின் சுவட்டில் – 63
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1
அவனி அரவிந்தன்

பார்வைக் குடுவையில்
நிரம்பிச் சரியும் பாலைநிலத்துகள்களை
ஒளிபட்டு மின்னும் தங்க மீன்களெனவும்
கடற்குதிரைக் கூட்டமெனவும் கற்பித்த வண்ணம்
மனோரதங்கள் தரிகெட்டுத் திரிகின்றன…
விருட்சங்கள் வெளியேறிய வனத்தில்
ஒற்றைச் சிறகு மறைக்கும் கதிரே
மற்றைச்சிறகின் மீதான நிழலாகப் படர்கிறது…
கனவுகளின் பாய்மரம் விரித்து
சிறகடித்துச் செல்கிறேன்
வழிநெடுகும் வியர்வைக் கடல் பெருகி
ஏக்கச்சிப்பிகள் மட்டுமே கரையொதுங்குகின்றன..
கரையே கடலாகவும்
கடலே உடலாகவும்
கலந்து கரைந்துருகிக் கிடக்குமிடத்து
எனதுறுபசி ஆற்றும் அமுதம்
எந்த மணல்மேட்டில் வழிகிறதென்றே தேடியலைகிறேன்
நண்டுகள் நடந்த சுவடுகளைப் பின்பற்றி…