- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35
- கவலை
- என் மூன்றாம் உலகம்!
- சுயபரிசோதனை
- சிலர் வணங்கும் கடல்
- தேடும் உள்ளங்கள்…!
- பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்
- இலக்கு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)
- மனசு
- அறை இருள்
- தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி
- ஊட்டவுட்டுத் தொரத்தோணும்
- விஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்
- பிரச்சாரம்
- அப்படியாகிலும் இப்படியாகிலும் …
- அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)
- யார் கொலையாளி? – துப்பறியும் சிறுகதை
- அதனதன் தனிமைகள்
- நெய்தல் போர்
- மரணத்தின் தூதுவன்
- அதுவரை பயணம்.
- 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)
- புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!
- செம்மொழித் தமிழின் பொதுமை
- என் மண்!
- யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்
- பெருங்கிழவனின் மரணம்
- குதிரைகள் இறங்கும் குளம்
- நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.
- கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது
- களங்கமில்லாமல்..
- பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)
- கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
- இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10
- அலை மோதும் நினைவுகள்
- வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்
- இரட்டை ரோஜா இரவு
குமரி எஸ். நீலகண்டன்.

கனத்த இதயத்தோடு
கடற்கரை வந்த போது
இதமானக் காற்றில்
இதயம் கரைந்தது.
உள்ளிருந்து உறுமிக்
கொந்தளித்த சுனாமி அலைகள்
ஆர்ப்பரித்த கடலைக் கண்டு
அடங்கி ஒடுங்கின.
மணற் பாதுகைகளாய்
உப்பு மணல்கள்
கால்களோடு
ஒட்டிக் கொண்டன.
களைத்து சிறிது
கரையினில்
கண்ணயர்ந்த போது
நிலத்திலிருந்து
ஆயிரமாயிரம்
கொந்தளித்த கடல்கள் வந்து
கடலோடு போரிட்டு
கரைந்து கொண்டிருந்தன.
கடலை விற்பவர்களும்
பட்டம், பஜ்ஜி
விற்பவர்களும்
கடலோடு சேர்ந்து
போரிட்டனர்.
எப்போதும் வென்றானென்ற
நிதர்சனத்தில் கடல்
நெய்தல் பூசூடி
பாடிக் கொண்டிருந்தது.
மௌன சாட்சியாய்
பெருமிதப் புன்னகையுடன்
நிலா கடலில்
முகம் பார்த்துக்
கொண்டிருந்தது.