- 20 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள்-1
- சீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு
- கீதாஞ்சலி (70) ஆனந்தத் தாண்டவம்…! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கடிதம்
- அப்பாவின் மரணம்
- கம்பனில் சாபங்களும் மீட்சிகளும்
- காற்றில் உன் கைவிரல்கள்
- இஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும் – ஒரு விமர்சனம்
- பெரியபுராணம் – 86 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) -கடிதம் – 2
- மஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-18) (Based on Oscar Wilde’s Play Salome)
- பெண் பனி
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?
- காவ்யா என்ன செய்து விட்டார் ?
- அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படவிழா, கருத்தரங்கு – ஏப்ரல் 29 – மே 1 2006
- ஞானத்தங்கமே
- சூழலும்,மனித இடைச்செயலும்!
- ஹ¤ருல்ஈன் தேவதையின் மடி
- கொலை செய்யும் குரங்கினம்
- தமிழில் தொழுகை : தொடரும் உரையாடல்
- சில பரிசுப்படங்கள்: சில குறிப்புகள்
- வளர்ந்த குதிரை – 1
- பாவேந்தர் பாரதிதாசனின் குடியானவன் – பாரதிதாசன் வாரம் (ஏப்ரல்21-29)!
- எடின்பரோ குறிப்புகள் – 13
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 18
- அழகி
- கனவுகளைத்தின்னும் இரவுகள்……..
- இரண்டு கவிதைகள்
- மலைகளும் மலர்களும் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- நாளை
- அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை
- கலைஞர், கமல் மற்றும் தேவன்
- கடிதம்
கவிஞர் புகாரி

இறுதியாய்ப்
பிச்சை கேட்ட பாத்திரத்திலும்
புளிச்சென்று எச்சில்
மிச்ச மீதி நம்பிக்கையும்
மரணப்பசிப் பெருங்குடலில்
இறுதி ஊர்வலம்
ஆயிரங்காலப்பயிர்
செழித்துக்கிடந்த
உள் முற்றத்திலிருந்து
ஓடிவந்த நாக்கு நாய்
துரத்திக் கடிக்க
இரத்தக் கசிவுகளோடு
தனிமை மண்டிக்கிடக்கும்
புதரில் விழுந்து
புதிராகிப் போனது இதயம்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
புதுத்தோல் போர்த்திக்கொண்டு
தனக்குள் செத்து பின்
தானே உயிர்த்து
மீண்டும்
மனிதர்களைக் காணும் பீதி
உயிரை மிதித்தாலும்
இம்முறை
அர்த்தம் புரிந்த
முதல் அழுகையோடுதான்
வெளிக்காற்றுக்குள்
வீசியெறியப்பட்டது
இதயம் தன் துடிப்புகளோடு
நிரந்தரம் அற்றதென்றாலும்
வயிறும் மனமும்
வீதிகளில் நிறைகிறது
இப்போது
நிச்சயமாகிப்போன
பிச்சையுமில்லாப் பிழைப்பில்
நிரந்தரமாகிப்போன நிரந்தரமற்ற
அன்னதானங்கள் என்ன
குறைந்தா போயிற்று
சொந்தக் கதவானாலும்
பத்துகோடிப் பூட்டுகள்
இரக்கமற்று
இறுக்கமாகத் தொங்கினால்
மனம்மாறி ஓர் நாள்
திறந்து வரக்கூட
இந்த ஜென்மம் போதுமா?
காத்திருக்காக்
கட்டற்ற உணர்வுகளுக்குள்
கைதாகிக் கிடக்கும் வாழ்க்கை
என்றும் விடுதலையாகப் போவதில்லை
என்பதே படைப்பிலக்கணம்
என்பதனாலேயே…
மறுக்கும் இடத்தில்
மன்றாடுவதல்ல வாழ்க்கை
கொடுக்கும் இடத்தில்
கொண்டாடுவதுதான்
*
buhari@gmail.com