- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு
- விடியும்!-நாவல் – (27)
- விடாது கருப்பு
- விமோசனம்
- நான் கணேசனில்லை…
- கவிதைகள்
- பால்யம்.
- குறும்பாக்கள்
- சூட்சுமம்
- கை நழுவின பகலிரவுகள்
- முன்னோடி
- செம்பருத்தி
- புரியாமல் கொஞ்சம்…
- நிறக்குருடுகள்
- எளிதாய்
- எத்தனை காலமாய்…
- எனக்கு வேண்டும் வரம்
- நன்றி
- புரிந்ததா
- திரை அரங்கில்
- ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003]
- ஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:
- எரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.
- அடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்
- கடிதங்கள் – டிசம்பர் 18, 2003
- வாசகர்கள் ,படைப்பாளிகள் கவனத்துக்கு
- சங்கம் சரணம் கச்சாமி
- நீயே உனக்கு சாட்சியாளன்!
- வாரபலன் – குறும்பட யோகம்
- விலங்குப் பலி x ஐீவகாருண்யம்
- ஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல
- வாசகர்கள் கவனத்திற்கு
- தொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து
- அழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)
பா.சத்தியமோகன்

மிகவும் தவித்தபின்
சில விஷயங்கள் சிற்சில கணத்தில்
தாமே நடைபெற்றுவிடுகின்றன
மிகவும் தவிக்காமலே இத்தனை காலம்
‘மிகவும் எளிதாக நடைபெற்றவையாயிற்றே ‘
என ஏங்கவும் வைக்கின்றன
பிறந்த குழந்தையின் எளிய விரல் எலும்பைப் போல
வளையும் நெகிழ்ச்சி இழந்து
இரும்பைப் போல எங்ஙணம் ஆயின எனத்
திகைக்க வைக்கின்றன.
பங்கிடுவதற்காக வைத்திருந்த மகிழ்ச்சியை
இதய அறையிலிருந்து ஒவ்வொன்றாய் இழக்குமுன்
இவற்றுக்கெல்லாம் விடை காண இயலுமா தெரியவில்லை.
தட்டாரப்பூச்சியைக் கேள்
விண்வெளியைக் கூட கேட்டுப்பார்
எவைதான் பதில் தரும் நமது தவிப்புக்கு ?
மிகவும் தவித்த பிறகு
மிகவும் விலக்கப்பட்ட பிறகு
மிகவும் வலித்த பிறகு
கிடைக்கப் போகும் அங்கீகாரத்திற்காக
நடக்கவிருக்கும் கனவிற்காக
காத்திருப்பதையோ-
மூச்சு விடுவதையோ-
நிறுத்திவிடாதே வேறொன்றைச் செய்.
நடக்கும் போது நடக்கலாம்
காத்துநில்லேன் தவம் கூடும்
வலிபடேன் புகழ் கூடும்.
—————————————–
pa_sathiyamohan@yahoo.co.in