- அணுப் பிணைவு சக்தி – அவனியின் எதிர்கால மின்சக்தி
- குளிர் அணு இணைப்பு cold fusion கேள்வி பதில்கள்
- மேஜை மீது சிறிய அளவில் அதிவெப்ப அணு இணைப்பு. (Hot fusion)
- பூனை வளர்த்த வரதராஜன் கதை
- 23 சதம்
- கலி காலம்
- சமரசமன்று : சதியென்று காண் !
- அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை
- காஞ்சி சங்கராசாரியார் : இந்துக்களின் போப்பாண்டவர் ?
- திண்ணையும், திராவிடியத்தின் சீரழிவும், மஞ்சுளாவும், மஞசள் காவியும்
- மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.
- மேலோட்டமான சிந்தனைகள்; ஆழமான அவ நம்பிக்கைகள். இதுதானா ஜெயமோகன் ?
- மதச்சாயம் மாற்றத்திற்கு வழிவகுக்குமா ?
- நாடும் கோவிலும்
- முயற்சி
- இரு நகைப்பாக்கள்
- குட்டாஸ் – 2
- பயங்கரவாதம்
- பாவனை முகங்கள்
- நவபாரதக் கண்ணம்மா: அருந்ததி ராய்
- எது கவிதை ?
- அரச சவம்
- தற்காலக் காதல்
- பம்பரமே – பராபரமே
- போர்க்காலமான பூக்காடு
- சமத்துவம்
- தூக்கம்.
- இறுதியாய் ஒரு கேள்வி…!
- சில நாட்களில்
- பகைவன்
- பிறவழிப் பாதைகள் (மீண்டும் தீம்தரிகிட, பன்முகம் -காலாண்டிதழ், நிழல் – நவீன சினிமாவுக்கான களம் )
- வாசிப்பனுபவமும் கண்டடைதலும் (அம்மா வந்தாள் பற்றிய இரா பாலசுப்பிரமணியம் கட்டுரைக்கு பதில்)
- திரையரங்கச் சமாச்சாரங்கள்- 1 – பெர்லின் சர்வதேச திரைப்படவிழா-2002
- எனக்குப் பிடித்த கதைகள் – 5 – மெளனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி ‘ (பதற்றமும் பரிதாபமும்)
பவளமணி பிரகாசம்

அன்றே சொன்னார் ஒளவை
நன்றாய் உணர்ந்தோர் உண்மை:
சாதி இரண்டொழிய வேறில்லை-
இனத்தின் ஒரு பாதி ஆண்கள்,
இனிய மறு பாதி பெண்கள்:
உலகின் ஒளியாய் இரு கண்கள்.
கண்கள் இரண்டு ஆயினும்
பார்வை என்றும் ஒன்றே,
ஆணும், பெண்ணும் இரண்டாயினும்
ஒன்றாய் பார்த்தல் நன்றே.
கல்வி ஞானத்திலே, நிதானத்திலே,
மதியூகத்திலே, ஊக்கத்திலே,
தெளிவான நோக்கினிலே,
திடமான மன உறுதியிலே,
சீரான தராசின் தட்டுகளாய்
இரு பாலாரும் இருந்திடவே,
ஏற்ற தாழ்வின்றி வாழ்ந்திடவே,
வண்டியில் பூட்டிய காளைகளாய்,
உருளும் இரு சக்கரங்களாய்,
நீளும் தண்டவாளங்களாய்
சரி நிகர் சமானமாய்
கை கோர்த்து நடக்கவே
மலரும் புதிய யுகமுமே,
உயரும் மனித இனமுமே.