This entry is in the series 20100305_Issue

ஆறுமுகம் முருகேசன்


பனியும் இலையும் பூத்திருந்த
அதிகாலையொன்றில் குழுமியது
நிரம்பி வழிந்த காதல்..

தொடர்ந்த நாழிகைகளில்
ஏதேதோ நிரம்பியும்
எதிர்வீட்டுக்குழந்தைகள்
மஞ்சள்டிரவுசர் அணிந்திருந்த
அப்பொம்மையை மீட்டியதும்
எழும்பிய அக்கீச்சொலியில்
முற்றமிட்டது மிதமிஞ்சிய காதல்..

இப்படியாக ..
விட்டுக்கொடுக்கப்பட்டிருந்த காதலில்
அதோ, தலைகாட்டாமல் சிரித்துச்செல்லும்
அப்பெண்ணும் மறைமுகப்படுகிறாள் !

Series Navigation