- சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
- வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்
- ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘
- ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘
- இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…
- மத மாற்றமா ? மத ஒழிப்பா ?
- நாராயண குரு எனும் இயக்கம் -1
- சூன்யம்
- கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்
- கரடி ரூம்
- தவிப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17
- இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்
- திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3
- கவிதை உருவான கதை – 4
- நாய்க்கும் நீரிழிவு வரும்
- தமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)
- முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்
- விருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்
- பாவண்ணனின் இரண்டு நுால்கள்
- சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்
- வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
- ஆறுவது சினம்
- அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]
- இன்னொரு தினம்:
- கடைசியாய்….
- விடியல்
- வினாக்கள் வியப்புகளாகட்டும்
- தமிழவன் கவிதை-3
- உள்ள இணையாளே
- உடலால் கட்டிய வாழ்வு
- இன்னும் விடியாமல்
- இரண்டு கவிதைகள்
- முகத்தைத் தேடி
- கவிதை
- கடல் தினவுகள்
- கதவுகளும் சுவர்களும்
- நட்பாராய்தல்
- கவிதை
- கவிதைகள்
- அன்புடன் இதயம்- 15
- ஞாபக மழை
- ஏமாற்றுக்காரி
- இயக்கம்
- தாலாட்டு
- போய்வருகிறேன்.
- உடல் தீர்ந்து போன உலகு
- நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
- விழிமீறல்
- வரவுயில்லாத செலவு
- பிசாசின் தன் வரலாறு – 3
எஸ். பாபு

கோவையில் மருதமலை செல்லும் ரோடு ஒரு காலத்தில் கரடு முரடாக இருந்ததாம். கோவை பேருந்து நிலையத்திலிருந்து மருதமலைக்கு எப்போதாவது ஒரு பஸ் வருமாம். ஆனால் கடந்த இருபது வருடங்களில் அப்பகுதி அடைந்த வளர்ச்சி ஆச்சர்யமானது என்று சொல்லப்படுகிறது. கோவையில் இப்போது மருதமலை ரோடு பரபரப்பான பகுதிகளில் ஒன்று. அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. அந்த ரோட்டில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் சில வருடங்கள் வேலை செய்தேன். ஒரு நாள் அலுவலகம் துவங்கிய நேரம் அலுவலக வாயிலில் ஒரு பரபரப்பு. அலுவலகத்திலிருந்து எல்லோரும் ரோட்டுக்கு ஓடினார்கள். ஒரு விபத்து நடந்திருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மீது பேருந்து மோதி அவர் அந்த இடத்திலேயே இறந்திருந்தார். முகம் மட்டும் அடையாளம் காணக்கூடியதாய் இருந்தது. இறந்த மனிதர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும் வங்கி ஒன்றின் வேலை பார்ப்பவர் என்றும் திரண்டிருந்த கூட்டம் அடையாளம் கண்டு கொண்டது. போலீஸ் ஆம்புலன்ஸ் எல்லாம் வந்து ‘க்ளியர்’ செய்து ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து சீராக ஒரு மணி நேரம் பிடித்தது. அலுவலகம் திரும்பிய எல்லோருக்கும் அன்றைய பேச்சு அந்த விபத்து பற்றியதாகத்தான் இருந்தது. இறந்தவருக்கு இது தான் பிறந்த ஊராம். பாட்டனார் காலத்திலிருந்து அவர்கள் குடும்பம் இந்த ஊரில் தான் இருக்கிறது என்று அவரது பூர்வீகம் பற்றியெல்லாம் அலுவலக மூத்த நண்பர் ஒருவர் விவரித்துக் கொண்டிருந்தார். பள்ளிக்கூடம் போனது முதல், அலுவலகம் சென்று வந்தது வரை நாள் தோறும் இந்த ரோட்டில் சென்று வந்த அந்த மனிதருக்குத் தெரிந்திருக்குமா இதே ரோட்டில் ஒரு நாள் அடிபட்டுச் சாகப்போகிறோம் என்று ? மனித வாழ்வின் நிச்சயமற்ற நிலையை நினைத்தும் இச் சம்பவம் குறித்தும் எனது சிந்தனை கீழ்காணும் கவிதையானது:
வழி வரலாறு
—-
பிழைப்பு தேடி இவ்வூருக்கு
உன் நாடோடி மூதாதையர் வந்துசேர்ந்த
ஒற்றையடிப்பாதை இதுவாக இருக்கலாம்
வண்டித்தடமாய் விரிவடைந்தபோது
நெல்மூட்டைகள் குலுங்க
உனது பாட்டன் முப்பாட்டன்கள்
சந்தைக்குப் போய்வந்திருக்கலாம்
செம்மண் சாலையெனவே
வளர்ந்த பிறகு
புழுதி பறக்க
முதல் மோட்டார் வாகனத்தில் வந்த
வெள்ளைக்காரனுக்கு
உனது முந்தைய தலைமுறைதான்
சாரதியாகவும் இருந்திருக்கக்கூடும்
எல்லாத் தடங்களும்
அழித்துப் போட்ட தார் ரோட்டில்
இன்று
வாகனங்கள் வழுக்கிக்கொண்டோட
விரைந்த சக்கரங்களுக்குள்
சிக்கிச் சிதைந்து
சதைக் குவியலாகிப் போன உன்னை
சற்று முன்
அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்.
(கணையாழியில் 2002ம் ஆண்டு வெளிவந்த கவிதை)
அன்புடன்
பாபு
agribabu@rediffmail.com
Babu Subramanian
Postdoc
Department of Agriculture, Food and Nutritional Science,
410, Agriculture / Forestry Centre,
University of Alberta,
Edmonton T6G 2P5
Alberta, CANADA.
Office phone: 780-492-1778
Home phone: 780-432-6530