- அறிவியல் துளிகள்-19
- நம்பு
- நீ
- லண்டனுக்கு வெகு அருகில் மிக மலிவாக – உரைவெண்பா
- மீண்டும் பசுமை..
- ‘எல்லாமே கூற்று! ‘
- எழுது ஒரு கடுதாசி
- ‘நாளை ‘ வரும்…
- சுடும்வரையில் நெருப்பு…
- கனவாய்…
- நசுக்கப்பட்ட ஆல விதைகளில்…
- வஞ்சம்
- முற்றுப் புள்ளியாகாது முரன்பாடுகள்
- பன்முகத் தன்மை (pluralism) பற்றி
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 16 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- ஆலமரம்.
- பியர் ரிஷார்
- உடைந்த மனிதனும் ‘உடைந்த காலும் ‘
- வாயு – அத்தியாயம் ஆறு (இறுதிப்பகுதி)
- யுத்தம்
- அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்
- The Fifth Annual Cultural Event -WORLD TAMIL ARTS AND CULTURAL ORGANIZATION -JAMAICA, NEW YORK 11432.
- கடிதங்கள்
- போர் நாட்குறிப்பு
- நினைத்தேன்…சொல்கிறேன். கூத்தணங்கும், கருணைத் தம்பிரானும் பற்றி
- அணுஉலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து: 3 பாரதத்தில் சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் பரிணாமமும் பரவுதலும்
- நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் (வ.அ.இராசரத்தினத்தின் ‘தோணி ‘- எனக்குப் பிடித்த கதைகள்-53)
மண்ணாந்தை

ஆதிப்பெருமனதின்
கனவு வெளியதனில்
ஒருமைச் சூல் கொண்ட
மேகங்கள் உள்ளூடே
மென்அலகு கனவதிர்வில்
பிரபஞ்சங்கள், காலங்கள்
காலவெளியதனில் உறைந்திடும் மாறிலிகள்
பிறப்பெடுக்கும்.
பிறப்புற்ற பின்னர் அவை
வேக விரிவேகும்.
மாறிலிகள் விதி பற்றி
விரிந்து படர்ந்து பின்னர்
உள்ளொடுங்கும்.
ஆயினும்
அதற்கிடையில்
தாரகைகள் தமைச் சுற்றும் சிறுகோள்கள்
அவை சிலவில்
உயிர் என்னும் ஒரு முகிழ்ச்சி
பின்
அச்சிறு முகிழ்ச்சி
பிரக்ஞை என மடல் விரியும்.
ஆயிரம் மடல் விரியும்
அம்மலரும்
மடல் விரிந்து
தன்னை கனவீன்ற
ஆதியை பிரதிபலிக்கும்.
பிரதிபலிக்கும் அத்தருணம்
தன் கனவில் தன் முகத்தை
தான் கண்ட அதிர்ச்சியிலே
கனவு கலையும்
அப்பெருங் கனவு கலைகையிலே
துகள் அழியும் அலை அழியும்
அண்ட வெளி அழியும்
கால கதியும் தன் ஓட்டங்கள்
நின்றழியும்
கனவு வெளியதனை அழிக்குமப் பெரு ஊழி
தானும் அழியும்
தன்னையே தின்றழியும்
அழியும் கனவினிலே
ஆயிரம் மடல் விரிந்த
அம்மலரும் கரையும்.
அம்மலர் கரைகையிலே
ஆதிப்பெருமனதும் கனவென்ற
கதையறியும்.