- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்
- குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி
- மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் !!!
- நிராகரிப்பை போர்த்திக் கொண்டவனின் மரணம்
- தாகூரின் கீதங்கள் – 10 என்னுடன் இருக்கிறாய் எப்போதும் !
- அக்கினிப் பூக்கள் – 10
- வாசனை
- வெளி இதழ்த் தொகுப்பு (ஒரு அரங்கியல் ஆவணம்) – நூல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து…
- டா(Da) — திரைப்பட விமர்சனம்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்
- பேராசிரியர் சே ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் திரையிடல்
- ஹென்டர்ஸன் பட்டிமன்றம் – 6 ஜனவரி 2008
- முரண்களரி ஐந்து நூல்கள் வெளியீடு
- ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் தொடர்ச்சி
- உன்னத மனிதன்(வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1
- லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா
- எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா – மலர்மன்னன் சொன்னதாக நான் குறிப்பிட்டதில் பிழை
- எழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்
- 27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில்
- ‘இயல்’ விருதின் மரணம்
- முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்
- அநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை
- டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”
- உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு அரங்கு சாருநிவேதிதாவின் மூன்று நூல்கள்
- மாத்தா ஹரி – அத்தியாயம் -43
- அரிமா விருதுகள் 2006
- என் தடத்தில்…
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! நியூட்ரான் விண்மீன் ! துடிப்பு விண்மீன் ! (கட்டுரை: 10)
- தைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை
- ராக்போர்ட் சிட்டி ஆகஸ்ட் 14
- Last Kilo byte – 4 வாசக ரசனைகள் – ஒப்பீடுகள் – எதிர்வினைகள்
- தரிசு நிலத்தில் பட்டாம்பூச்சி
- கவிதைகள்
- பனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிகழ்வு!!!
- கனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..
- தவளை ஆண்டு 2008
- கீழ்க்கட்டளை தனலஷ்மி!
- அசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது
- அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)

எப்போதும் நான்
உன்பின்னே.
…
இயங்காத வேளையிலும்
எண்ணமெல்லாம்
நீயாக இருக்கிறாய்
உன்னோடு இருப்பதுதான்
வாழ்க்கை
என்று அர்த்தமாகிவிட்டது
ஓர் உயர்ந்ததை
ஓர் உன்னதத்தை அடைய
உன்துணை தேவைதான்
அதற்காக
இன்னொரு வீடாய்
ஒரு கனவுலகம்கூட தேவையே
எல்லாமே நீதான்
என்றிருப்பது
எனக்கு ஏற்புடையதல்ல
எத்தனை காலத்துக்குச்
சராசரியாயிருந்து
வாய்நீர்வடித்து வாழ்வது
ஒரு கணமாவது
உள்ளத்தின் வலிமைக்கு
வாய்ப்புத்தரவில்லையே நான்
காலத்தின் கையில்
தூரிகையைத் தந்தது
தவறு
யாரோ ஒரு
ஒப்பனைக்காரரிடம்
ஒப்படைத்ததும் அப்படியே
காலம்
என்கையில் தூரிகையாய்
இனி
வண்ணம் தீட்டுவேன்
என்னைத் தீட்டுவேன்
என்
இருத்தலின் அடர்த்தியை
எடைபோட
இப்போதிலிருந்து நான்…
:
எதையும் மறைக்காமல்
சிரிக்கிறேன் நான்
காயும் நான்
கனியும் நான்
உங்களைப்போல் நான்
பிணமாவதில்லை
கனியாகிறேன்
நான் மரத்தில்
செடியில் கொடியில்
கனியாகிறேன்
சொல்வதையெல்லாம்
கனியாய்ச்சொன்னால்
கனிவாய்ச்சொன்னால்
நீங்கள்
கனிகளின் மரமாகலாம்
என் மணம்போல்
உங்கள்
மனத்திற்கும்வேண்டும் மணம்
என்னிடம்
மணத்துடன்கூடிய மனமும்
உங்களிடம்
மனத்துடன்கூடிய மணமும்
இருந்தால்
நாம்தாம் மகத்தானவர்கள்.
எல்லாம்
என் விழித்தலில் இருக்கிறது
தேவதையின் தரிசனம்
என் தேடலெல்லாம்
தேவதையின் தரிசனமல்ல
தேவதைதரும் தரிசனம்
அங்கிருந்துதான்
என் திசைகள் தொடர்கின்றன
அந்த விழுதைப்பற்றித்தான்
தொங்கினேன்;ஆடினேன்
அந்தக்கணத்தில்தான்
தேவதையின்
சிறகுகளைப்பொருத்திக்கொள்கிறேன்
இருளில் ஓர் ஒளி
நெளியிது பாம்பாய்
பகலில் ஓர் இருட்டு
தெரிகிறது வெளிச்சமாய்
கனிகள் என் கைகளில்
எல்லாம்
அந்த ….
03.12.2006
pichinikkaduelango52@gmail.com