This entry is in the series 20020629_Issue

எஸ். வைதேஹி.


காற்றின் வீசல்
ஜன்னல் தாண்டி
என்
முகம் அறைந்து
சாயல் ஈர்த்துக்
கொண்டது.

உருவமற்ற
முகத்தினூடே
விடைபெற்றுக்
கொண்டது,
இடுக்குகளில்
தொங்கிய
உணர்ச்சியற்ற
எண்ணங்கள்.

கடிகாரம் உருட்டிடும்
காலைப் பொழுதுக்கான
மற்றைய
மன அழுத்தங்களை.

அப்பால் விரிந்திடும்
மனங்களும், பறவைகளும்.

***
svaidehi@hotmail.com

Series Navigation