- ஒன்று பட்டால்…
- அரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்
- புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….
- ஆண்-பெண் நட்பு
- தமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி
- ஈவேராவின் இதிகாசப் பொய்கள்
- ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ
- அஜயன் பாலாவின் படைப்புலகம் – ஒரு அறிமுகம்
- திருவண்டம் – 1
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (மூன்றாம் காட்சி)
- புகைவண்டி
- மூன்று அதிவித்தியாசமான வார்த்தைகள்
- அன்னையின் அணைப்பு
- உடையும் மதிப்பெண்கள்
- கீதாஞ்சலி (24) காலையிலே எழும் கீதம்!
- நனவு
- புத்துயிர் பெறும் விண்வெளிக் கப்பல் மீண்டும் எப்போது பயணம் செய்யும் ? (When Will Be the Next Space Shuttle Flight ?)
- சந்தன
- கணக்கு வாத்தியார்
- கிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள்
புதியமாதவி

அம்மா..
ஏன் அழுகிறாய் ?
உன் கனவுகளை எல்லாம்
என்னிடம் சுமத்தினாயே.
தாங்க முடியாமல் என் தோள்கள் வலிக்கின்றன.
அம்மா..
உன் ஆசைகளை எல்லாம்
என் கனவுகளில் தூவினாயே
தூக்கமில்லாமல் என் இமைகள் துடிக்கின்றன
அம்மா
எபோதும் எதிலும்
உனக்காகவே என் போட்டிகளும் பரிசுகளும்.
அம்மா..
உன்னையும் என்னையும்
இணைத்திருப்பது
தாள்களில் எழுதப்பட்டிருக்கும் மதிப்பெண்களும்
தரைகளில் உடைந்துவிழும் பரிசுகளும்
மட்டும்தானா ?
அம்மா
இவை இல்லை என்றால்
நீயும் நானும் வெறும் பொம்மைகளா ?
அம்மா..
நான் அழுதப்போது உன் மார்பில் அணைத்தாயே
அந்த ஈரத்தில் மட்டும்தான் இருந்தது
உனக்கும் எனக்குமான உறவு.
அந்த நினைவுகளிலெயே
இதோ..
மாடியிலிருந்து குதிக்கிறது
உன் கனவுகளைச் சுமந்த
என் தோள்கள்.
அம்மா ..
அப்பாவிடம் சொல்லிவிடு
உடைந்து போனது
அவர் கனவுகள் மட்டுமல்ல
என் வாழ்க்கையும்தான்.
….
puthiyamaadhavi@hotmail.com