- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11
- புளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் ! (கட்டுரை -1) (New Horizon Spacecraft)
- இத்தனை வருடங்களும் – இப்படித்தான்
- அங்காடி தெரு காட்டும் கண்ணாடி
- முதல் சம்பளம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று
- கட்டைக்குரல்
- தெரிக்கும் உவமைகள்…
- குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது
- சொல்லப்படாதவைகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19
- அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்
- ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து
- ஒரு விபத்து; சில நிகழ்வுகள்
- நிராகரிப்பு
- ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்
- அஜ்னபி கவிதைகள்
- எலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்
- சிஙக்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்
- அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து
- நள்ளிரவின் பாடல்
- Ilankai Tamil Sangam is holding a grand cultural show, ‘Kalai Vizha 2010’
- மழைகள்
- ஓசைகள் பலவிதம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16
- ரிஷியின் கவிதைகள்:
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1
- வேத வனம் விருட்சம்- 87
- களம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்
- முள்பாதை 31
அஜ்னபி
e=mc2
சமவெளிகள் தாண்டிய
மலைச்சரிவு நோக்கிப் புறப்பட்ட
வைக்கோல் நிறத்து வண்ணத்துப்பூச்சியின்
அலை கோட்டுப் பயணத்தில்
சகநிகழ்வாய்க் குறுக்கிட்ட
ஓடும் கடுகதி ரயிலின்
திறந்த ஜன்னல் வழி நுழைந்து
மறுபுறத்து ஜன்னல் வழி வெளியேறியதான
நுண்கணப்பொழுதில்
யுகங்களின் தொலைவு
கடந்துவிடப்பட்டிருந்தது
சுயம்
ஆரம்பப் பள்ளி மாணவனது
அளந்து எழுதுகிற வலது கை
எழுதிக் கொண்டே போக
அனிச்சை செயலாய் இடது கை
அட்டை கொண்டு மறைப்பதாய்
சுயநலச்சிறையின்
திரையிட்ட வாழ்வினூடே
போட்டிப் பரீட்சையென
சுமையாகிப் போயின
சுற்றமும் சூழலும்..
ஓரிரு வரிகளெழுதி
கைவிடப்பட்ட விடைகள்..
எட்டிப் பார்த்தெழுதிய
இரவல் கணக்குகள்..
இவை தவிர
ஊன்றியெழுதி
கிழிபட்ட தாள்களாய்
நட்பும் உறவும்..
எழுதிய கட்டுரையை
எழுத்தெண்ணி மீளாய்தல் போல்
பழைய நினைவுகளை
மீட்டுவதில் விரயமாகும்
சில பொழுதுகள்..
தேர்வு நேரம் முடிந்து
தாள்கள் பறிக்கப்பட்ட பிறகான
தருணத்தில்தான்
உறைக்கிறது
சுட்டெண் எழுத மறந்தது…
சுயம் அங்கு தொலைந்தது..!
3600
பிரச்னையென்கிற
மய்யப்புள்ளியை
தொட்டு நிற்கும்
தீர்வு ரேகைகள்
பல்வேறு கோணங்களில்…
துளியென இருக்கும்
புள்ளியிலான இடைவெளிகளை
முழு வட்டம் மிகையாக்கும்…
ஒன்றையொன்று ஊடறுக்கும்
நேர்க்கோடுகளின் நீட்சி
விலகிச்செல்லும் புள்ளிக்கு
சமாந்தரமாய் நீளும்…
தனியொரு ரேகை
வட்டத்தை துண்டாடும்…
பிறிதொரு புள்ளி நிழலென
புறவெளி நோக்கி
முடிவிலியாய்த் தொடரும்…
-அஜ்னபி