- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் உப்புநீர்க் குளம் பெர்குலரேட் உப்பு & மீதேன் வாயு கண்டுபிடிப்பு !
- என் மகள் N. மாலதி – (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 1
- சுப்ரபாரதிமணியனின் ” திரைவெளி “
- கம்ப இயக்கம் கம்பனடிப்பொடி (நூறாண்டு காணும் தமிழறிஞர்)
- காரைக்குடி கம்பன் அடிப்பொடி நூற்றாண்டு விழாவும் கம்பன் திருநாள் விழாக்களும் (ஏப்ரல் 5 முதல் 9 வரை)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -29 << காயப் படுத்தாதே ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் << மரணமே கவிஞன் வாழ்வு >> கவிதை -4
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -2
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (3)
- உலகத் தீரே! உலகத் தீரே!
- வறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்
- புதுமைப்பித்தனை முன்வைத்து வெ.சா.வின் வில்லங்கம்
- மரணத்தை மையமாகக் கொண்ட வாழ்வின் வட்டப்பாதை மலர்ச்செல்வனின் “தனித்துத் திரிதல்”
- இன்னொரு சைக்கிள் ஒட்டியும் பின்னொரு சிறுவனும்…
- சுயமில்லாதவன்
- சேன் நதி – 1
- சேன் நதி – 2
- விடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …
- அந்த இரவு
- தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)
- “ மனித நகர்வும் இரண்டாவது பிளவும் ”
- நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளும் தவம்
- தமிழ் கற்பித்தல் திட்டம்
- மறுசிந்தனையில் இஸ்லாமிய கருத்தாடல்கள்
- நிலவற்ற மழை இரவில்
- மனதின் கையில்… .. ..
- வேத வனம் விருட்சம் 29
- மன்னிப்பு
- நேசத்துடன் காதலுக்கு
- திரிசங்கு சொர்க்கம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தெட்டு
- காங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம்
- சங்கச் சுரங்கம் — 7 : மையணல் காளை
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
கம்பன் கழகத்தார்
இந்த ஆண்டு காரைக்குடி கம்பன் திருநாள் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதன் முன் நிகழ்வாக காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் கம்பன் அடிப்பொடி நூற்றாண்டுவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவை கம்பன் அடிப்பொடி நூற்றாண்டு விழாக்குழுவினர் நடத்துகின்றனர். இவ்விழாவில் நீதிபதி இலக்குமணன் அவர்கள் தலைமை ஏற்கிறார்கள். கம்பன் கலைக் களஞ்சியுத்தையும் அவர்கள் வெளியிடுகிறார்கள். தொழிலதிபர் ஏ.சி. முத்தையா அவர்கள் இப்புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்கள். மத்திய அமைச்சர்கள் மாண்புமிகு ப. சிதம்பரம், மாண்புமிகு இரகுபதி, மாண்புமிகு இராசா, தமிழக அமைச்சர் மாண்புமிகு பெரிய கருப்பன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டுச் சிறப்பிக்கின்றனர். குமுதம் இதழ்க் குழுமங்களின் தலைவர் ஜவகர் பழனியப்பன் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டுப் பெருமைப்படுத்துகிறார்கள். மேலும் தோழர் தா.பாண்டியன் அவர்கள் நினைவுரையாற்றுகிறார்கள். திருமிகு இராஜேஸ்வரி நடராஜன், கணபதி ஸ்தபதி ஆகியோர் கம்பன் அடிப்பொடியாருடனான நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 6,7,8 தேதிகளில் கம்பன் திருநாள் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நிகழ்கிறது. ஏப்ரல் ஒன்பதாம் தேதி நாட்டரசன் கோட்டையில் இவ்விழா தொடர்கிறது.
முதல் நாள் அகத்தியன் (திரைப்பட இயக்குநர்) (இவர் திருச்சி ராதாகிஷ்ணன் அவர்களின் மாணவர்) மற்றும் திருமிகு சாரதா நம்பி ஆருரன் (இவர் தற்போது தமிழ்நாடு அரசின் தகவல் ஆணையர் பதவியில் இருக்கிறார்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் கம்பன் அடிசூடி அவர்கள் ஏற்படுத்தியுள்ள மீனாட்சி பழனியப்பன் அறக்கட்டளைப் பொழிவினை சொல்லரசி இளம்பிறை மணிமாறன் அவர்கள் கம்பனில் எண்ணமும் வண்ணமும் என்ற தலைப்பில் ஆற்ற உள்ளார்கள். இவ்விழாவிலேயே இவ்வுரை புத்தகமாகவும் வெளிவருவது புதுமை. இதனை திருமிகு ஜவகர் பழனியப்பன் அவர்கள் வெளியிட இருக்கிறார்கள்.
அடுத்த நாள் (ஏப்ரல் 7) நிகழ்வில் திருமிகு கண. சிற்சபேசன் தலைமை ஏற்க திரு தெ. ஞானசுந்தரம் அவர்களும், இலங்கை ஜெயராஜ் அவர்களும் பங்கேற்கும் உரைக்கோலம் நடைபெற உள்ளது.
அடுத்த நாள் நிகழ்வில் ( ஏப்ரல் 8) திருமிகு நெல்லைக் கண்ணன் தலைமை ஏற்க பட்டி மண்டபம் நடைபெற உள்ளது. திருவாளர்கள் அப்துல் சமது, பழ. முத்தப்பன் ஆகியோர் இதனுள் வாதாட உள்ளனர்.
நாட்டரசன் கோட்டையில் இலங்கை ஜெயராஜ் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.
இவ்விழாக்களுக்கு வந்து இருந்து கம்பன் கவி அமுதைச் சுவைக்க அன்போடு கம்பன் கழகத்தார் அழைக்கின்றனர். வருக. வருக. வளம் சேர்ப்போம்.
மேலதிக விபரங்களுக்கு காண்க http://kambanadippodi.blogspot.com
—
M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com