This entry is in the series 20090326_Issue

செல்வராஜ் ஜெகதீசன்



எதிர்க்காற்றில் மிதித்தபடி
அவசரமாய் போய்க்கொண்டிருந்த
அலுவலகப் பயணமொன்றில்
அதுவரைக்கும் ணா என்று
தாவி என் சைக்கிளின்
பின் சீட்டில் அமர்ந்த
பள்ளிச் சிறுவன்
பேச்சுவாக்கில்
ஏழாவது படிக்கும் தான்
பத்தாவதுக்குப்பின்
எப்படியும் போய்விடுவேன்
ஏதாவது ஒரு வேலைக்கு
என்றவுடன்
மேல படிக்கலாமில்ல
என்றேன்.
அது போதும்ணா
அப்பாம்மாவுக்கு
கஞ்சி ஊத்த என்றான்.

இன்னொரு சைக்கிள் ஒட்டியும்
பின்னொரு சிறுவனுமாய்
கண நேரக் காட்சி ஒன்று
கண் முன்னே வந்து போனது.


Series Navigation