This entry is in the series 20060630_Issue

ராமசந்திரன் உஷா


கேள்விகளை எழுப்பி
கொண்டே இருக்கிறார்கள்
பதில்களும் வந்துக்
கொண்டே இருக்கின்றன
கேள்விக்கான பதில்
இது இல்லையே என்கிறார்கள்
கேள்வி எழுப்பினாய்
பதில் சொல்லிவிட்டோம்
சரியில்லை என்றால்
எங்கள் பதிலுக்கான
கேள்வியை கேள் என்றார்கள்
மீண்டும் மீண்டும் கேள்விகள்
வந்துக் கொண்டே இருக்கின்றன
ஆனால் பதில் மட்டும்
அதற்கானது இல்லை
பதில்கள் ஒருநாள் தானே
தெரிந்து விடும்
கேள்விகளைக் கேட்பதை
நிறுத்திவிட்டால்!
————————-
ramachandranusha@rediffmail.com

Series Navigation