- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: ட்ரூமன் கப்போட் (1)
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங் கதை) -1
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன், சனிக் கோள்களின் துணைக் கோளில் அடித்தள திரவக் கடல் [கட்டுரை: 45]
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -1
- மடயர்க்குப் பாடம் சொல்வாய்!
- தீவிரவாதம்
- வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…
- கரித்துண்டால் குறித்துவைத்த தோற்றம் மறைவின் குறிப்புகள்
- காயம்பட்ட நியாயங்கள்.
- ஓர் சந்திப்பு!
- கேமந்த் கர்கரே, அசோக் காம்தே, சந்தீப் உண்ணிகிருஷ்ணன் – ஒரு கலை அஞ்சலி
- கவிதைகள்
- கொத்தணிக் குண்டுகள்-Cluster bombs
- மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்…
- வனத்தின் தனிமரம்
- கடவுளின் காலடிச் சத்தம் – 6 கவிதை சந்நிதி
- நீ வரப்போவதில்லையென..
- உருவமற்ற நிழல் பொழுது/ மனம்
- வாழ்வும் வலியும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினேழு
- வேத வனம் விருட்சம் 13
- தாகூரின் கீதங்கள் – 58 கனல் பொறி எழுப்பட்டும் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -13 << தீவிலே அடித்த புயல் ! >>
எஸ்ஸார்சி

ஜீவன் முக்தனுக்கு
இழப்பேது
உறங்கினால் என்ன
உழைத்தால் என்ன
நன்மை தீமை
வெற்றி தோல்வி
லாப நஷ்டம்
சாதிப்பு பாதிப்பு
எல்லாமே ஒன்று.
அது
இரண்டல்லாதது
இளைப்பார இடமளிப்பது
ஆன்மாவுக்கு ஆனந்தமாவது
உடலா
உலகா
பெறுவதா விடுவதா
இன்பமா துன்பமா
யானா எனதா
ஏதுமற்று அனுபவமாவது.
உடல்
உணர்வு
மனம்
புத்தி
எல்லாம் கடந்த பிரம்மம்
எப்போதுமுள்ள பிரம்மம்
தெளிந்த அவ்வறிஞன்
திரிகிறான் சந்தோஷமாய்.
இரண்டல்லாதது
அநாதியாய் அழிவில்லாதது
பிரபஞ்சம் பிடித்து நிற்பது
பகுக்க ஒண்ணாதது
பிறப்பும் இறப்பும்
தொலைத்தது
வேற்றுமை உனராதது
அது நீயே ஆகிறாய் சீடனே
இரண்டல்லா என்றுமுள
பிரம்மத்தை தெரிவாய்
கணமதுவும் கழியவிடாதே
வெற்றுப்போதாய்.
தோன்றி மறையாதொன்று
பிரபஞ்சம் தாண்டிய ஒன்று
மாயை
உடல் மனம்
தொடா நின்று
அலை எழா சமுத்திரமாகி
முக்காலமும் உய்யும்
பழுதில்லா விடுதலையாகி
அனுபவமாகும்.
உயர் பிரம்மமாய்
அது ஆகிறாய் நீ.
தியானி தேர்ந்து கொள்.
பனி மறையும்
பகலவனால்
அஞ்ஞானம் அகலும்
அறிவொளியால்.
உணர்வுச்சுழல்
அடிமைத்தளை
விடுதலையோ
விருப்பைத்தொலைப்பது.
ஆசை விதை அழிய
பிரம்மம் பிடிபடும்
இரண்டென்பதில்லா
இன்பத்தின் இருப்பு.
பிரம்மத்தின் உறைவிடம்.
உள்ளும் புறமும்
மேலும் கீழும்
முன்னும் பின்னும்
இடமும் வலமும்
எங்கும் எதிலுமுறை
பிரஞையின் இயக்கம்
பிரம்மம் என்பது.
உணர்வுகளை
மீட்டும்
விஷயங்களினின்று
மனதை வென்றெடு.
ஒருநிலைப்படுத்து
ஔர்ந்து அறி சுயத்தை
அச்சம் தவிர்
புனித வாழ்வு சித்திக்கும் -அத்வைத அம்ருத உபநிசத்