- சட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்
- வேத வனம் விருட்சம் 11 கவிதை
- திசைமாறிய பறவைகளின் கூடு
- இந்திய தேசியக் கொடி நிலவில் விழும் உளவியுடன் சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது ! (கட்டுரை : 3)
- ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்!
- ஒரு பனை வளைகிறது !
- நெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி
- நிலையின்மை
- கடவுளின் காலடிச் சத்தம் – 4 கவிதை சந்நிதி
- வரம்புகளை மீறி
- தீபாவளி 2008
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை
- மௌனித்த நேசம்
- மானிடவியல்
- அப்பாவின் சொத்து
- நிழலற்ற பெருவெளி…
- ஒரு தினக் குறிப்பு
- நூலாய்வு : கனவுச் சந்தை (உலகச் சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு)
- குட்டி மகளின் ஞாபகம்
- தாகூரின் கீதங்கள் – 56 எல்லாம் நீ ! எனக்குரியவன் நீ !
- தாகம்
- நகரத்தின் ஆன்மாக்கள்
- தானத்தில் சிறந்தது உடல்தானம்
- நாம் காலாண்டிதழ்
- மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி
- நினைவுகளின் தடத்தில் – (21)
- உறவுச் சங்கிலிகள்
- இதயம் சிதைந்த இயந்திர மனிதன்
- “பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் துவக்கப் புள்ளியாக ஒபாமா”
- கவிதை௧ள்
- பாவலர் பாரதியார் நினைவேந்தி…!
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -5
- கோடி கொடுத்துத் தேடினால்
- ஒரு அசலான மனுஷன் – என். எஸ். கிருஷ்ணன்
- கடலில் வீசப்பட்ட குழந்தை
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- விஸ்வநாதன் ஆனந்த்
- ” கண்ணம்மா என்னும் அழகி “
- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- மதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களூக்கு ஒரு பாராட்டு மடல்
- அட்மிஷன்
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- திருகுர் ஆன் மொழிபெயர்ப்பும்,புரிதலும்
- “அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்
- ஒபாமா
- நனவாகும் கனவு
- ஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினைந்து
- எம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி ! >>
எஸ்ஸார்சி

உருவும் பெயரும்
வெற்றுத்தோற்றம்
பிரம்மம் தவிர்த்திட
எங்கே அவைகளின் இருப்பு
கயிற்று அரவமே
காணும் காட்சி.
கயிரே காண்பது
பாம்பன்று அறிதல் தெளிவு
தன்னை அறி
அறியாமை
பிறப்போடு இறப்பின் குழப்பம்
தொலையும் காண்
தானே ஒளிரும்
தடைஇலா ஒளி
தொடக்கம் முடிவிலா
மாறிலி எப்போதுமிருக்கும்
பிறப்பிலா அது
சத் சித் ஆனந்தம்
பிரம்மத்தின் உரு
அளந்து விட முடியா
அருங்குணம்
உருவமிலி
தனிச்சிறப்பாய் ஏதுமிலி
பிரித்து அறிய மாட்டாதது
துனை ஏற்காதது
இணை இல்லாதது
சுயமாய் சுதந்திரமாய்
நிறைவாகிய பிரம்மம்.
கண்களுக்குத்தெரியும் பூத உடல்
கண்களுக்கெட்டா சூக்கும உடல்
காரணமாகி நிற்கும் காரண உடல்
இவை அணுகிவிடா பிரம்மம்.
உடல் உயிர்
மனம் புத்தி
வினை ஈறாய்
ஐந்து மூடிகள் கொண்ட
அரும்பொருள் ஆன்மா.
நடப்பு உறக்கம்
ஆழ்ந்த நித்திரை
இவைகடந்து
காணக்கிடைக்கின்ற
மூலகாரணம்
சத் ராஜச தாமச குணங்கடந்து
நன்மைக்கும் தீமைக்கும்
நடு நாயகமாய்
இலங்கும் அது.
சத் சித் ஆனந்தம்
பிரம்மத்தை தொடக்கமாய்ப் பேசும்
சத்தும் சித்தும் வேறல்ல
அறிதலுக்கு சாட்சியே சத்
மெய்யை அறிதல்
வலி யினின்று விடுதலை
பிரம்மம் ஆனந்தக் கடல்
சித்தே ஆனந்தம்
சத் சிதா ஆனந்தம்
பிரம்மமே காட்சிக்கும் காரணத்திற்கும் மூலம்
மனம் இந்திரியங்கள் உயிர் பிரம்மத்தில்
உதிக்கின்றன.
பிரம்ம ஞானம் பிடிபடவே
பிரம்மம் அனுபவமாகிறது.
( சிவ ஞானாம்ருத உபனிசத் )