- வழியில போற ஓணான…
- அப்பா
- விடியும்! நாவல் – (9)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்தொன்பது
- தாயே வணங்குகிறோம்
- ஆடு புலி ஆட்டம்
- என்று உனக்கு விடுதலை
- நல்லவர்கள் = இஇந்தியர்கள்
- ராஜீவின் கனவு
- எந்திர வாழ்க்கை
- சுவைகள் பதினாறு
- செயலிழந்த சுதந்திரம்.
- மனசெல்லாம் நீ!
- தாய்மைக் கவிதை
- மனிதனாக வாழ்வோம்
- உருவாக்கம்
- அறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)
- சனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]
- ஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள்
- தஞ்சைக் கதம்பம்
- வாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12
- சங்கப் பாடம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி
- கடிதங்கள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி
- குறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ
- சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ
- 4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக
- சிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்
- சட்ட பூர்வமான வரதட்சணை! வரதட்சணைத் தொகைப் பதிவு! முதலிரவு முன் ஒப்பந்தம்! பெண்வீட்டார் மனமுவந்து ஒப்புக் கொள்ளும் இவற்றை முதலில்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2
- அழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )
- நாவலும் யதார்த்தமும்
- சொல்லாடலும், பிலிம் காட்டுவதும்
ஜோதிர்லதா கிரிஜா

இந்தியாவை இணையற்ற நாடாக்கும் இன்கனவு கண்டு வந்த இளைஞனே!
சிந்தியாமல், சிற்றிரக்கம் கூட இன்றி உனைச் சிதைத்திட்ட தொரு கூட்டம்.
பதவி விட்டு நீ இறங்க நேர்ந்தபோது பதைத்துவே பலர் நெஞ்சம்
உதவி செய்ய இந்தியர்க்கு உற்றவர் இனி யாரென்று பலருக்கும் பெரும்வாட்டம்.
ஏனெனில் இந்த நாட்டை நேசிப்பதாய் இன்று பலர் சொன்னபோதும்
காணவில்லை நேருவின் வாரிசுகளுக் கிணையோரை இப்போதும்.
நேருவின் ஆட்சிமுதல் ராஜீவின் ஆட்சிவரை நம் நாட்டில்
நேரிட்ட தவறுகளைக் கோடிட்டு அடுக்காதீர்! – ஏனேனில்
இவர்களது ஆட்சியிலே இனியவையே நிறைய!
கேடுகள் குறைவு – அதனால்தான் இன்றளவும்
கவர்கிறது நம் உள்ளம் நேருவின் குடும்பம் – எனவேதான் அடிக்
கோடு இட வேண்டாம் தீங்குகளின் பட்டியலில்!
தொழிற்கூடமாய் இந்தியாவை மாற்றினார் ஜவாஹரென்றால்,
எழில்மிகு பசுமைப் புரட்சியினை ஏற்படுத்தினார் உன் அன்னை!
கணிப்பொாறித்துறைதனிலே கணப்பொழுதில் இந்தியாவை மக்கள் நாம்
களிப்புறவே மாற்றியமைத்தவன் நீயன்றோ! துளியளவும் இதில் ஐயமுண்டோ ?
ஆகமொத்தம் முத்தான முத்துறையில் இந்தியாவை
முன்னேற்றியதுன் குடும்பம் – ஆனால், ஐயகோ! இன்றுனைச்
சாகக்கொடுத்துவிட்டுச் சோகத்தில் உழல்கின்றோம்;
என்னே துயரமிது! எள்ளளவும் குறையவில்லை.
உயிருடன் நீ அன்று உலவியபோதெல்லாம்
உதட்டையும் அசைக்காத உலுத்தர் சிலர் – உன்
பெயர் கெடப் பீரங்கி ஊழலிலே உனை இணத்து உவக்கின்றார்
பதறிப் போய்ப் பதிலளிக்க நீ இலை இன்று என்பதாலே.
விளக்கம்தான் அளிப்பதற்கு உயிர்த்தெழுந்து வந்திடுவாய் எனும்
கலக்கம் அக்கசடருக்கு இல்லாதும் போனதாலே!
ஆனாலும், உன் கள்ளமற்ற நிலையை நீ மெய்ப்பிக்க இயலாது
போனாலும் நம்புகிறோம் நாங்களுனை; எங்களன்பு அகலாது.
இருபத்து ஓராம் நூற்றாண்டில் நம் நாடு
இணையற்ற நாடாக இவ்வுலகில்
உருப்பெறும் உன் கனவு போகாது உன்னோடு – அது
நனவாகும் நன்னாளோ மிக அருகில்!
ஆனால், இக்குறியை இலக்காக வைத்தன்று
செயல்பட்ட நீயோ உயிரோடு இல்லை இன்று
வீணாய் மடிந்துபோனாய் எமைக் கலக்க,
அயல்நாட்டுத் தமிழன் உன் உயிர் பறிக்க.
திட்டப்பணிச் செலவுகளில் பத்து விழுக்காடு மட்டும் – கீழ்
மட்ட மனிதர்களை அடைவதாகத்
திட்டவட்டமாகவே அறிவித்த முதல் ஆள் நீ!
மற்றபலர், உனக்கு முன்னோர், கண்டிதனைச் சொல்லவில்லை!
வெண்டைக்காய் வழ வழப்பில் வசவசப்பாய்ப் பேசாமல்
கண்டிப்பாய் உனது நிலை அறிவிக்கும் வீரன் நீ! – அதனால்தான் அன்று
அமெரிக்கப் போர்விமானம் பெற்றோல் இட இந்தியாவில் தரையிறங்க மறுதலித்தாய்;
அமரிக்கையாகவும் அதிகாரமாகவும் அறுதியிட்டுப் பதிலிறுத்தாய்!
மாறாக, இன்றுள்ள ஆட்சியரோ அமெரிக்க அதிபர்தம்
அடிவருடிபோலவர்தம் கருத்தையே ரீங்கரிப்பார்!
ஈராக் நாட்டுக்கு நம் வீரர் தமையனுப்பி அவரங்கே
அடிபட்டுச் சாவதையும் அங்கீகரிப்பார்!
இன்று நீ இருந்திருப்பின் ஊழல், வறுமை
மற்றும் பல தீமையெல்லாம்
வென்று மீளும் பாதையிலே இந்த நாடு
வெற்றிநடை போட்டிருக்கும்.
ஆட்சியாளனாய் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவனாயும்
சேகரித்த அனுபவத்தின் வாயிலாக – எங்களது
மீட்சிக்கு அடிகோலிவிட்டிருப்பாய்!
ஆதரித்திருந்திருப்போம் உனை நாங்கள் அளவற்ற ஆர்வத்துடன்!
‘அய்யோ! இந்த நாடு கொடுப்பினையற்றதுவோ ‘ என்று
குய்யோ முறையோ வென நாங்கள் குமுறுவதை நீ ஏற்க மாட்டாய்.
எனவே நீ விட்டுச் சென்ற பணியனைத்தும் முடித்திடவும் – உன்
கனவுகள் நனாவாகி நம் மக்கள் களிப்புறவும் உழைத்திடுவோம் – இது உறுதி, இது உறுதி!
jothigirija@vsnl.net