- சனிக்கோளின் துணைக்கோளில் நீர் ஊற்றுகள் எழுச்சி! செவ்வாய்க் கோளை வலம்வரும் விண்சுற்றி! [Water on Saturn ‘s Moon & Mars Orbiter Or
- உண்மை தெய்வமான க(வி)தை
- கீதாஞ்சலி (64) வீணாகும் தீபங்கள்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- டான் கபூர் கவிதைகள்
- எல்லம் வாத்துக்களே
- மனிதனாய் தவிர்த்து
- வன்மழை
- உலகம் என்பது வண்ணம்
- மகத்தானதும் அற்பமானதும் – ( மூலம் :க்ஷுவாங்ட்சு )
- படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம்
- சேந்தனாரின் கடவுளர் இருவர், காதலியர் இருவர்
- சுனாமி வைத்தியம்!
- கருவண்டாகி பறந்துபோகும் சித்தன் – நவீனம் தாண்டிய கவிதை பற்றி
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1
- வானகமே. வையகமே சுற்றுப் புற சூழல் இதழ் பற்றி
- நான் கண்ட சிஷெல்ஸ் – 14. சிஷெல்ஸில் தமிழர்கள்
- உண்மையின் ஊர்வலம் .. (4)
- புதுமைப் பித்தனும், நடப்பியலும்
- நம்மாழ்வார்
- யாழன் ஆதி கவிதைகள்
- பெரியபுராணம் – 80 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்
- சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்
- சொல் இனிது சொல்வது இனிது
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-12) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ராகு கேது ரங்கசாமி (தொ ட ர் க தை -1)
- யதார்த்தம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12
- அப்பாவின் மனைவி
- புலம் பெயர் வாழ்வு (4)
- ‘வெடி மருந்து வீச்சமில்லாத தெருக்களில் நடக்கக் கனவு கண்டவன்’
- குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
- கோபால்சாமியா ? கோயாபல்ஸ்சாமியா ?
- காற்றோடு திரிகின்ற யமன்
- ஒருநாள் கிறிக்கற் (புதிய) விதியை ஏற்றிடலாமா ?
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!
- அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி
- ராணுவம், காவல் துறைகளில் முகமதியர்: நிஜங்களை நோக்கி ஒரு பயணம்
- சொல்லிப் பிாிதல் உனக்குச் சுகமே! நினைவு நீங்கா எங்கள் தோழனுக்கு எங்கள் அஞ்சலி!
- ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!
யாழன் ஆதி

இதைத்தான் சொல வேண்டுமா
நீ நிறைத்த குடத்தின்
கனவுகளையும் சேர்த்து
எந்த வழிதலிலும் நீயற்ற
மர்மம் தொடர்கிறது
ஒரு வழக்கமான இசைத்தெரித்தலாய்
இருந்தால்கூட
நீ காய்ச்சிய பாலின் ஆடைகளிலிருந்தே
ஆரம்பம் ஆகிறது
மரவமர்வின் முடிவில்
பறந்தோடும் பறவையின்
எச்சத்தில் மிச்சமிருப்பதென்ன
என்னைத் தவிர.
கானல் வரிகள்
வறண்ட காற்றில்
உதிர்ந்து கொண்டிருந்தன சருகுகள்
தகிப்பின் சூடு தாங்காமல்
பொரிந்தன முட்டைகள்
இலைகளற்ற
மரக்கிளைக் கூடுகளில்
அளவுகடந்த துன்பத்தின் அலைகள்
சூழ்ந்து படர்ந்துத் திரண்ட
வெறுமையெங்கும் விளைந்திருந்தது
அனாதியின் ஓங்காரம்
சுருண்டு விழுந்த புறாவின்
இறக்கைகளில்
சூழ்ந்து இருந்தது வாழ்வு பற்றிய விவரணம்.
***
ஓர் ஏகாந்தமாய் தவிக்கும்
எப்பொழுதிலும்
பசப்புத லில்லா வருகையாய்
இருந்திருக்கிறது தனிமை
உன் நினைவுகள் சுழற்றியடிக்கும்
காற்றில்
கேசமாய் கலைவேன்
கடிகாரத்தின் முட்களாகி
நகர்ந்துக் கொண்டிருக்கும் அவை.
***
திடாரென கேட்கும் பறவையின் ஒலியிலோ
கிணற்றடி குட சப்தத்திலோ
கரைந்து மீள்வாய் நீ
yazhanaathi@gmail.com
