- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8
- ஓரின காதல் – வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்
- அறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்
- நண்பர் வஹாபிக்கு நன்றி
- நான் முடிவு செய்கிறேன் உன்னை
- KhudaKayLive (in the name of god) திரைவிமர்சனம்
- இருட்டுக்குள் தீப்பிளம்பு…
- சித்திர சிற்பி, புதிர் குரு= தமிழில் இரண்டு மென்பொருட்கள்
- அவரவர் திராட்சை..
- ஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி
- எதிரும் புதிரும்
- உயிர்த்தெழுதல்…
- கரியமில இரகசியம்
- Satsang led by Sri Nithya Bhaktananda Swami a direct disciple of Enlightened Master Paramahamsa Nithyananda
- வானம் பாருங்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் கீதம் கவிதை -12 பாகம் -2
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது ? (கட்டுரை: 60 பாகம் –
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2
- வார்த்தை ஜூலை 2009 இதழில்…
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு
- முத்துக்கமலம் இணைய இதழ்
- அவள் ஒரு தொடர்கதை
- “இரவலனாய் மாறிய மன்னன்”
- வேத வனம் -விருட்சம் 40
- மைக்கல் ஜாக்சன்
- பதின்மம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்
ரஜித்
மழைத்துளிகளை
எண்ணிவிட்டேன்
உன்னிடம் மயங்கிய
மக்கட் துளிகளை
எப்படி எண்ணுவேன்?
உதிரும் சொல் விலை
ஒரு கோடி
அதிரும் அசைவுகள்
அறுபது கோடி
நீயே செய்துகொண்டாய்
உன் சொர்க்கத்தை
கடவுளுக்கு
வேலை மிச்சம்
உன் இசையும் அசையும்
கடவுள் தந்தது
பங்காளி உனக்கு
கடவுள் மட்டுமே
உன் கண்ணொளியில்
கூசிப்போகிறான் கதிரவன்
உன் ‘திரில்லர்’ வட்டு
‘பாப்’ உலகத்தைத்
திருகிப் போட்டது
வட்டுக்கள் விற்ற கணக்கு
மில்லியனில் முன்னூறாம்
வங்கமென விரிந்தது
வங்கிக் கணக்கு
பின் வழக்குகள் தின்றதால்
வற்றிப் போனது
ஐந்தில் அரங்கேறினாய்
ஐம்பதில் அடங்கிவிட்டாய்
ஒளிக் கீற்றாய் வாழ்ந்தாய்
இன்று ஒளிவட்டாய் வாழ்கிறாய்
புற்றுநோய்க்கும்
மற்ற நோய்க்குமாய் நீ
வாரிக் கொடுத்தாய்
வெந்துபோன முகத்துக்காய்
வந்த கோடி ஒன்றரை
அத்தனையையும் நீ
கொட்டிக் கொடுத்தாய்
கொடையாக
நீ சேர்த்துப் போட்ட
செல்வங்களை
சேர்த்த கடன் தின்றுவிடும்
நீ கொடுத்தது மட்டுமே
உன் கொடியைப் பறக்கவிடும்