- விண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)
- ப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )
- விடுமுறையின் முதல் நாள்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8
- ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….!
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!
- கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )
- எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…
- தர்கா பண்பாட்டு அரசியல்
- குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்
- இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம்
- பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?
- மண்டைக்காடும் இந்து எழுச்சியும்
- சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…
- அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்
- மனிதம்
- பெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- முற்றும் இழத்தல்
- இப்போதாவது புரிகிறதா
- கவிதைகள்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்
- மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்
- தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்
- Looking for Comedy in the Muslim World – திரைப்படம்
- புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு
ஏ.எம். குர்சித்

வாசலில் புழுதி அடங்க தண்ணீர் தெளித்தபோது
எதிர்வீட்டு தடித்த பையன்
தலை தெறிக்க வந்து சொன்னான்
நீ விபத்துபட்ட செய்தியை.
கை-கால்-மார்பு-வயிறு எங்கெனும் ரெக்கை பிறக்க
தறிகெட்டு உன்புறம் ஏகினேன்
நீ ஆஸ்பத்திாிக் கட்டில் நெடுகிலும் பரவயிருந்தாய்
உன் மண்டை பிளந்த தடத்தில் ஈக்கள் மொய்த்தன
உனக்கான உயிர்காப்பு போராட்டமும் தொடங்கியிருந்தது.
உடம்பில் எல்லா அணுக்களும் உறைந்து நிற்க
கடிகாரத்தின் முள் நெஞ்சில் உதைப்பதாக
சுரத்தற்று அங்குமிங்கும் அலைவுற்றேன்.
சொட்டு சொட்டாய் உள்ளிறங்கும் சேலைன்
உட்சுவாசம் சீர்பெற பொருத்திய சிலிண்டர்
வெள்ளைகோட் மருத்துவர்களின் முயற்சிஸ
வியர்வை கசியும் நோ;ஸ்களின் பரபரப்புஸ
சாந்தம் பெற்ற கடவுளிடம் சேவித்த
என் ஆயிரம் ஜெபங்கள்..
எல்லாவற்றையும் புறக்கணித்து
வாயைப் பிளந்தபடி இறந்துதான் போனாய்.
நெருப்பு வாகைப்பூ நிறத்தில் சூாியன் கிடந்த மாலை
உனைப் புதைத்து கைமண் தட்டினர்
கிாியைகள் முடித்து பல திசை பெயர்ந்தனர்
இனி என்ன தொடங்கிற்று என்பாடு
கறையான் கரைத்து பரணில் கிடந்த
தூசு நிறைந்த சம்பிரதாய வழிநின்று
பசுமை குழைத்து செப்பனிட்ட என் சந்தோசமும்
பூக்கள் தலைநீட்டும் கனவு
பனிக்கட்டிகள் தளம்பும் என் எதிர்பார்ப்பு
அத்தனையையும் ஒரு கோணிப்பையில் அடைத்து
கண்ணுக்கு புலப்படா தூரம் விசைகூட்டி விசுக்கினர்
உணர்வுகளின் தலைசிரைத்து உடலை மட்டும்
ஒளியின் சிறுகூறையேனும் அனுமதியா அறையில் இட்டனர்
உனக்கென்ன
நீ ஆழப் பெருங்குழியில்
நித்திய சொரூபியாகியிருப்பாய்
நான் இங்கு செத்துச் செத்து பிழைக்கிறேன்.
ஏ.எம். குர்சித், இலங்கை