This entry is in the series 20070927_Issue

கே.பாலமுருகன்


வீட்டு வாசலில்
உட்கார்ந்து கடந்த
எத்தனையோ மாலை பொழுதுகள்!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
பக்கத்து வீட்டு அம்மாயி அக்கா
தவறிப் போனாள்!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
வீட்டு நாய்க்குட்டி
எங்கேயோ ஓடிப் போனது!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
வீட்டின் எதிரிலிருந்த
மரம் சாய்ந்து போனது!

எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான்
அப்பா கயிற்று நாற்காலியில்
இறந்து கிடந்தார்!

எல்லாமும் ஒரு மாலை பொழுதில்
நிகழ்ந்து முடிந்து
விடுகிறதே!

அன்றென்னவோ. . .
மாலை பொழுதில்தான்
இரு பட்டாம்பூச்சிகள் வீட்டில்
பறந்து கொண்டிருந்தன!


bala_barathi@hotmail.com

Series Navigation