This entry is in the series 20021022_Issue

சித்தார்த் வெங்கட்


யான் பெரியோன்
என்னினும் சிறியதிவ் வையம்
வையத்துலோர் யாவரும் அஃதே
பதர்களிடை நெல்மணி நான்
கடவுள் என்பது மாயை
என்செயல் யாவிற்கும் யானே ஆசான்
எனப்பல எண்ணங்கள் என்னுள் தோன்றி
அகந்தை சிறையெனை ஆட்கொளும்போது

கடல் பார்த்தல் நன்று.

***
siddhu_venkat@yahoo.com

Series Navigation